Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிங்கப்பூரில் இன்று தமிழ் சினிமா பவள விழா!
தமிழ் சினிமாவின் பவள விழா இன்று சிங்கப்பூரில் தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்களும் நடைபெறவுள்ளன.
முதல் தமிழ் படம் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து தமிழ் திரையுலகின் பவள விழாவை்க் கொண்டாட நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.தமிழ் சினிமாவின் பவள விழா இன்று சிங்கப்பூரில் தொடங்குகிறது. இந்த விழாவில், தமிழ் சினிமாவில் சாதனை படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன், நாடோடி மன்னன், ரத்தக்கண்ணீர் மற்றும் பின்னர் வெளியான 16 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு படங்கள் சிங்கப்பூரில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளன.
வருகிற 11ம் தேதி டாக்டர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஒரு அணியும், சிவாஜி படப் புகழ் ராமலிங்கம் ராஜா தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.
பாரதிராஜா தலைமையிலான அணியில் சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவால் தமிழ் மக்கள் பெற்றது சோதனையா, சாதனையா என்பது பட்டிமன்றத்தின் தலைப்பாகும். இயக்குநர் ராஜேந்தர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுகிறது. பின்னர் நவம்பரில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலும், டிசம்பரில் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளிலும் கலை விழாக்கள் நடைபெறவுள்ளன.
நிறைவு விழா சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!