ஸ்னேகா ரொம்ப குஷி தனது திரை வாழ்க்கையை ஸ்னேகா இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்.புதுப்பேட்டைக்கு முன்பு, புதுப்பேட்டைக்குப் பின்பு என பெருமையாக கூறுகிறார்ஸ்னேகா.புதுப்பேட்டையில் நடிப்பதற்கு முன்பு வரை நான் ஒரு சாதாரண நடிகையாகத்தான்இருந்தேன். ஆனால் புதுப்பேட்டையில் நடித்தபோதுதான் எனக்குள் இருந்தஅற்புதமான நடிகையை உணர்ந்தேன் என்று கூறும் ஸ்னேகா, யாரைப் பார்த்தாலும்செல்வராகவன் புராணம் பாடுகிறாராம்.விபச்சாரி வேடத்தில் நடித்திருந்தாலும் கூட அதில் விரசம் தெரியாத அளவுக்கு எனதுகேரக்டரை அருமையாக வடித்திருந்தார் செல்வா என்று கூறும் ஸ்னேகா, இனிமேல்புதுப்பேட்டை போல நல்ல கேரக்டர்களகாப் பார்த்து நடிக்கப் போகிறேன், காமாசோமா என்று வந்து போக மாட்டேன் என்கிறார்.புதுப்பேட்டையில் நடித்தபோது அவரைத் தேடி இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புவந்ததாம். ஆனால் சற்றே பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்ட ஸ்னேகா, இப்போதுஅந்தப் படங்களை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.தனது புதிய இமேஜை இந்தப் படங்கள் கெடுத்து விடும் என்பதுதான் இதற்குக்காரணம்.ஒரு மூத்த தெலுங்கு நடிகர் ஒருவர் புதுப்பேட்டை படத்தைப் பார்த்து விட்டுஸ்னேகாவை தனது படத்தில் புக் பண்ண பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால்அம்மணி முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.ஸ்னேகா கிடைக்காத ஏக்கத்தில் அந்த நடிகர் இன்னும் டென்ஷனாக இருக்கிறார்.புதுப்பேட்டையில் கிளாமரில் தூக்கலாகத் தெரிகிறீர்களே என்று ஸ்னேகாவிடம்கேட்டால், அதில் என்ன தப்பு? ஒரு விலைமாது எப்படி இருப்பாள்,கவர்ச்சியாகத்தானே இருக்க முடியும், அப்படித்தான் நானும் நடித்திருந்தேன்.தனுஷுடன் நெருங்கி நடித்தபோது எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. ரொம்பஇயல்பாக அந்தக் காட்சிகள் வந்திருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். இதுபெருமையாக இருக்கிறது என்கிறார்.புதுப்பேட்டையைத் தொடர்ந்து சில தமிழ்ப் பட வாய்ப்புகள் ஸ்னேகாவைத் தேடிவந்திருக்கிறதாம். அதேபோல மலையாளத்தில் அவர் நடித்த துருப்பு குளானும்,ஸ்னேகாவுக்கு புதிய ரசிகர் வட்டாரத்தை அங்கே ஏற்படுத்தியுள்ளது.இப்போது தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை சீர் தூக்கிப் பார்த்து, திருப்திஏற்பட்டால் அவற்றை ஒத்துக் கொள்ளப் போகிறாராம் ஸ்னேகா.

By Staff
தனது திரை வாழ்க்கையை ஸ்னேகா இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார்.புதுப்பேட்டைக்கு முன்பு, புதுப்பேட்டைக்குப் பின்பு என பெருமையாக கூறுகிறார்ஸ்னேகா.

புதுப்பேட்டையில் நடிப்பதற்கு முன்பு வரை நான் ஒரு சாதாரண நடிகையாகத்தான்இருந்தேன். ஆனால் புதுப்பேட்டையில் நடித்தபோதுதான் எனக்குள் இருந்தஅற்புதமான நடிகையை உணர்ந்தேன் என்று கூறும் ஸ்னேகா, யாரைப் பார்த்தாலும்செல்வராகவன் புராணம் பாடுகிறாராம்.

விபச்சாரி வேடத்தில் நடித்திருந்தாலும் கூட அதில் விரசம் தெரியாத அளவுக்கு எனதுகேரக்டரை அருமையாக வடித்திருந்தார் செல்வா என்று கூறும் ஸ்னேகா, இனிமேல்புதுப்பேட்டை போல நல்ல கேரக்டர்களகாப் பார்த்து நடிக்கப் போகிறேன், காமாசோமா என்று வந்து போக மாட்டேன் என்கிறார்.

புதுப்பேட்டையில் நடித்தபோது அவரைத் தேடி இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புவந்ததாம். ஆனால் சற்றே பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொண்ட ஸ்னேகா, இப்போதுஅந்தப் படங்களை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.

தனது புதிய இமேஜை இந்தப் படங்கள் கெடுத்து விடும் என்பதுதான் இதற்குக்காரணம்.

ஒரு மூத்த தெலுங்கு நடிகர் ஒருவர் புதுப்பேட்டை படத்தைப் பார்த்து விட்டுஸ்னேகாவை தனது படத்தில் புக் பண்ண பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால்அம்மணி முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.

ஸ்னேகா கிடைக்காத ஏக்கத்தில் அந்த நடிகர் இன்னும் டென்ஷனாக இருக்கிறார்.

புதுப்பேட்டையில் கிளாமரில் தூக்கலாகத் தெரிகிறீர்களே என்று ஸ்னேகாவிடம்கேட்டால், அதில் என்ன தப்பு? ஒரு விலைமாது எப்படி இருப்பாள்,கவர்ச்சியாகத்தானே இருக்க முடியும், அப்படித்தான் நானும் நடித்திருந்தேன்.

தனுஷுடன் நெருங்கி நடித்தபோது எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. ரொம்பஇயல்பாக அந்தக் காட்சிகள் வந்திருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். இதுபெருமையாக இருக்கிறது என்கிறார்.

புதுப்பேட்டையைத் தொடர்ந்து சில தமிழ்ப் பட வாய்ப்புகள் ஸ்னேகாவைத் தேடிவந்திருக்கிறதாம். அதேபோல மலையாளத்தில் அவர் நடித்த துருப்பு குளானும்,ஸ்னேகாவுக்கு புதிய ரசிகர் வட்டாரத்தை அங்கே ஏற்படுத்தியுள்ளது.

இப்போது தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை சீர் தூக்கிப் பார்த்து, திருப்திஏற்பட்டால் அவற்றை ஒத்துக் கொள்ளப் போகிறாராம் ஸ்னேகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X