Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஸ்னேகாவின் சினிமாகேஸ் போட்ட நாக்ரவி நடிகை ஸ்னேகா மற்றும் மலேசிய தொழிலதிபர் நாக் ரவி ஆகியோரின் காதல்கதையை பின்னணியாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்படும் படத்திற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஸ்னேகாவுக்கும், மலேசியத் தொழிலதிபரான நாக் ரவிக்கும் இடையிலான காதல்,பார்ட்டி, நிச்சயதார்த்தம், கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் இந்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்தக் காதலை ஸ்னேகாமறுத்தார். ஆனால் நாக் ரவி உண்மைதான் என்றார். இதையடுத்து தன்னை தொந்தரவுசெய்யக் கூடாது என நாக் ரவிக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்னேகா.இதையடுத்து ஸ்னேகாவுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது எனவும் நாக் ரவிக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந் நிலையில், ஸ்னேகா நடிக்கும் தெலுங்குப் படத்திற்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நாக் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நானும், ஸ்னேகாவும்காதலித்தோம். நிச்சயதார்த்தமும் நடந்தது. சில பிரச்சினைகளால் அது நின்று போனது. ஆனால், இப்போது ஸ்னேகாவே நடிக்க நாகபூஷனம் என்பவரது இயக்கத்தில் மனசுபாலிகா மவுன ராகம் என்ற பெயரில் தெலுங்குப் படம் தயாராகிறது. தமிழிலும்இப்படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப் படம் எனக்கும் ஸ்னேகாவுக்கும் இடையிலான பழைய காதல் கதையைமையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இது வெளியானால் எனது நற்பெயருக்குகளங்கம் ஏற்படும். எனவே இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், விளக்கம் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
நடிகை ஸ்னேகா மற்றும் மலேசிய தொழிலதிபர் நாக் ரவி ஆகியோரின் காதல்கதையை பின்னணியாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்படும் படத்திற்கு சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்னேகாவுக்கும், மலேசியத் தொழிலதிபரான நாக் ரவிக்கும் இடையிலான காதல்,பார்ட்டி, நிச்சயதார்த்தம், கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் இந்த செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இந்தக் காதலை ஸ்னேகாமறுத்தார். ஆனால் நாக் ரவி உண்மைதான் என்றார். இதையடுத்து தன்னை தொந்தரவுசெய்யக் கூடாது என நாக் ரவிக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார் ஸ்னேகா.
இதையடுத்து ஸ்னேகாவுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது எனவும் நாக் ரவிக்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில், ஸ்னேகா நடிக்கும் தெலுங்குப் படத்திற்கு தடை கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் நாக் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நானும், ஸ்னேகாவும்காதலித்தோம். நிச்சயதார்த்தமும் நடந்தது. சில பிரச்சினைகளால் அது நின்று போனது.
ஆனால், இப்போது ஸ்னேகாவே நடிக்க நாகபூஷனம் என்பவரது இயக்கத்தில் மனசுபாலிகா மவுன ராகம் என்ற பெயரில் தெலுங்குப் படம் தயாராகிறது. தமிழிலும்இப்படத்தை தயாரிக்கிறார்கள்.இந்தப் படம் எனக்கும் ஸ்னேகாவுக்கும் இடையிலான பழைய காதல் கதையைமையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இது வெளியானால் எனது நற்பெயருக்குகளங்கம் ஏற்படும். எனவே இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தார். மேலும், விளக்கம் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!