சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு - பல்லக்கில் அழைத்து வரப்பட்ட சினேகா!

By Shankar

நடிகை சினேகா - பிரசன்னா திருமண வரவேற்பு நேற்று மாலை விமரிசையாக நடந்தது.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனை முறைப்படி பத்திரிகையாளர்களுக்கும் அறிவித்து கல்யாண வேலையில் இத்தனை நாள் மும்முரமாக இருந்தனர்.

நேற்று முன்தினத்திலிருந்து இருவரது திருமண சடங்குகளும் ஆரம்பித்தன. சினேகாவுக்கு நலங்கு வைத்தல், மருதாணி இடுதல் போன்ற சடங்குகள் நடந்தன.

நிச்சயதார்த்தம்

இதைத் தொடர்ந்து நேற்று மாலை சினேகா - பிரசன்னா நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசன்னாவுக்கு சினேகாவின் பெற்றோர் உடைகளை வழங்கினர். தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரும் சினேகாவுக்கு பிரசன்னாவின் பெற்றோர் வீட்டு முறைப்படி பரிசளித்தனர். மணமகன் ஒரு யானை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை அது. பின்னர் இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர்.

அடுத்து, இருவரது திருமண வரவேற்பும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

பல்லக்கில்...

சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர்.

இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இருவருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X