twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கப்பூரில் ஸ்னேகா பட்டபாடு சிங்கப்பூரில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி திக்கு முக்காடினார் ஸ்னேகா. பின்னர் போலீஸ் கமாண்டோ படையினர்வந்து அவரை மீட்டனர்.சிங்கப்பூரில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்னேகாவை அழைத்திருந்தனர்.தனது தாயார் பத்மாவதியுடன் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார் ஸ்னேகா.ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டல் திறப்பு விழா. அதற்காக அங்கு காரில் வந்த ஸ்னேகாவை 2,000 மேற்பட்டரசிகர்கள் சுற்றி வளைத்தனர். கார் கதவைக்கூட திறக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், பயந்து போனஸ்னேகா காரை விட்டு இறங்கவே இல்லை.கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஸ்னேகாவை மீட்க ஹோட்டல் நிர்வாகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள்பலனனிக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து ரசிகர்கள்கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். பின்பு காரில் இருந்து இறங்கிய ஸ்னேகா போலீஸ் பாதுகாப்புடன் ஒட்டலுக்குபோனார்.விழா நிறைவு பெற்று திரும்பி வரும் போதும் மீண்டும் ரசிகர்கள் ஸ்னேகாவின் காரை சுற்றி வளைத்தனர்.காருக்குள் ஏற முயன்ற ஸ்னேகா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கினார். அவரை ரசிகர்கள் நெருக்கித் தள்ளவே,உதவி கேட்டு அலறினார். சிற்ய அளவில் அங்கிருந்த போலீசாரும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்பாடுத்தமுடியமால் திணறினர்.இதையடுத்து சிங்கப்பூர் கமாண்டோ படைக்கு தகவல் கிடைத்து பறந்து வந்தனர். அவர்கள் வந்து தான்ஸ்னேகாவை ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். ஆனாலும் அவரை காரில் ஏற்ற முடியாத அளவுக்கு பெரும்கூட்டம் அதை சுற்றி வளைத்தது.இதையடுத்து வேறொரு காரில் ஏற்றி ஸ்னேகாவை அனுப்பி வைத்துள்ளனர்.சென்னை திரும்பிய ஸ்னேகா இது குறித்துக் கூறுகையில்,ரசிகர்கள் அமைதியாத்தான் நின்றிருந்தாங்க. நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் ஆர்வ மிகுதியல என்னைசூழ்ந்திட்டாங்க. ரசிகர்களின் அன்புப் பிடியில சிக்கி தவித்த என்னை கமாண்டோ படை வந்து மீட்டுப்போனசம்பவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்றார்.

    By Staff
    |
    சிங்கப்பூரில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி திக்கு முக்காடினார் ஸ்னேகா. பின்னர் போலீஸ் கமாண்டோ படையினர்வந்து அவரை மீட்டனர்.

    சிங்கப்பூரில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்னேகாவை அழைத்திருந்தனர்.தனது தாயார் பத்மாவதியுடன் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார் ஸ்னேகா.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டல் திறப்பு விழா. அதற்காக அங்கு காரில் வந்த ஸ்னேகாவை 2,000 மேற்பட்டரசிகர்கள் சுற்றி வளைத்தனர். கார் கதவைக்கூட திறக்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், பயந்து போனஸ்னேகா காரை விட்டு இறங்கவே இல்லை.

    கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஸ்னேகாவை மீட்க ஹோட்டல் நிர்வாகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள்பலனனிக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து ரசிகர்கள்கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். பின்பு காரில் இருந்து இறங்கிய ஸ்னேகா போலீஸ் பாதுகாப்புடன் ஒட்டலுக்குபோனார்.

    விழா நிறைவு பெற்று திரும்பி வரும் போதும் மீண்டும் ரசிகர்கள் ஸ்னேகாவின் காரை சுற்றி வளைத்தனர்.காருக்குள் ஏற முயன்ற ஸ்னேகா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கினார். அவரை ரசிகர்கள் நெருக்கித் தள்ளவே,உதவி கேட்டு அலறினார். சிற்ய அளவில் அங்கிருந்த போலீசாரும் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்பாடுத்தமுடியமால் திணறினர்.

    இதையடுத்து சிங்கப்பூர் கமாண்டோ படைக்கு தகவல் கிடைத்து பறந்து வந்தனர். அவர்கள் வந்து தான்ஸ்னேகாவை ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். ஆனாலும் அவரை காரில் ஏற்ற முடியாத அளவுக்கு பெரும்கூட்டம் அதை சுற்றி வளைத்தது.

    இதையடுத்து வேறொரு காரில் ஏற்றி ஸ்னேகாவை அனுப்பி வைத்துள்ளனர்.

    சென்னை திரும்பிய ஸ்னேகா இது குறித்துக் கூறுகையில்,

    ரசிகர்கள் அமைதியாத்தான் நின்றிருந்தாங்க. நான் வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் ஆர்வ மிகுதியல என்னைசூழ்ந்திட்டாங்க. ரசிகர்களின் அன்புப் பிடியில சிக்கி தவித்த என்னை கமாண்டோ படை வந்து மீட்டுப்போனசம்பவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்றார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X