'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமரசம்'!

By Shankar

SPB Charan
சென்னை: எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.

சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.

அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார்.

மேலும் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் மூலம் சோனாவை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனா-எஸ்.பி.பி.சரண் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.

ஆனால் இதுபற்றி சரண் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்ப்பந்தம்?

சோனா தன் வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம், அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து வந்த நெருக்கடிகள்தான் என்று கூறப்படுகிறது.

சரணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோனா அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என போலீசாரே சோனாவை மிரட்டியது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, திரையுலக முக்கிய பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக சோனா இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X