Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 8 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமரசம்'!

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.
சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.
அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.
இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார்.
மேலும் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் மூலம் சோனாவை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சோனா-எஸ்.பி.பி.சரண் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.
ஆனால் இதுபற்றி சரண் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்ப்பந்தம்?
சோனா தன் வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம், அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து வந்த நெருக்கடிகள்தான் என்று கூறப்படுகிறது.
சரணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோனா அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என போலீசாரே சோனாவை மிரட்டியது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, திரையுலக முக்கிய பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக சோனா இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.