சோனியா மிஸஸ் ஆவது எப்போது? சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் டிசம்பருக்குள்கல்யாணம் நடைபெறும் என செல்வாவின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான காதல் ஜோடிகளில் செல்வராகவன்,சோனியா அகர்வாலும் ஒன்று.இதேபோல பரபரப்பை ஏற்படுத்திய சூர்யாவும், ஜோதிகாவும் ஒரு வழியாகஅடுத்தமாதம் செட்டிலாக உள்ளனர். இப்போது செல்வா, சோனியாவின் டர்ன்.முட்டல், மோதலுடன் நடந்து வரும் இவர்களது காதல் தேறுமா என்று கோலிவுட்டில்அடிக்கடி பட்டிமன்றம் நடப்பதுண்டு. இருவரது காதல் குறிததும் பல்வேறு செய்திகள் வந்த நிலையில் இருவரும்கல்யாணம் செய்து கொள்ளப் போவது நிச்சயம் என்று சமீபத்தில் கஸ்தூரி ராஜாஉறுதிப்படுத்தினார். அதற்கேற்பசோனியாவும் புதுப் படம் எதையுமஒத்துக்கொள்ளவில்லை.இந் நிலையில் கல்யாணம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கஸ்தூரிராஜா கூறியுள்ளார். அவர் கூறுகையில்,சண்டிகருக்கு குடும்பத்தோடு போய் சோனியாஅகர்வாலின் குடும்பத்தாரை சந்தித்துபேசி விட்டோம். டிசம்பருக்குள் கல்யாணம் நிச்சயம் நடந்து விடும். திருமண தேதிதொடர்பாக இரு வீட்டாரும் தற்போது பேசி வருகிறோம் எனறார்.இதற்கிடையே, கஸ்தூரி ராஜா இளசுகளைப் போட்டு எடுத்து வரும் இது காதல் வரும்பருவம் படம் (இன்னொரு துள்ளுவதோ இளமை என்கிறார்கள்) அடுத்த மாதம்திரைக்கு வருகிறதாம். இதைத் தொடர்ந்து 12 வயதே நிரம்பிய 5 விடலைகளைவைத்து ஒரு புதுப்படத்தை இயக்குகிறாராம் கஸ்தூரி.சிறு வயதில் கிரிமினல்களாக மாறும் இளைஞர்கள் குறித்த கதையாம் இது.இந்தப் படத்திற்கு 12 வயசு என்று பெயர் வைத்துள்ளார் கஸ்தூரி. தமிழ்ப்புத்தாண்டுக்குள் 2 படங்களை இயக்கி ரிலீஸ் செயயும் திட்டத்தில் உள்ளாராம் கஸ்தூரிராஜா.தனுஷை வைத்து மீண்டும் இயக்கப் போவது எப்போதோ?
சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் டிசம்பருக்குள்கல்யாணம் நடைபெறும் என செல்வாவின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.
சண்டிகருக்கு குடும்பத்தோடு போய் சோனியாஅகர்வாலின் குடும்பத்தாரை சந்தித்துபேசி விட்டோம். டிசம்பருக்குள் கல்யாணம் நிச்சயம் நடந்து விடும். திருமண தேதிதொடர்பாக இரு வீட்டாரும் தற்போது பேசி வருகிறோம் எனறார்.
இதற்கிடையே, கஸ்தூரி ராஜா இளசுகளைப் போட்டு எடுத்து வரும் இது காதல் வரும்பருவம் படம் (இன்னொரு துள்ளுவதோ இளமை என்கிறார்கள்) அடுத்த மாதம்திரைக்கு வருகிறதாம். இதைத் தொடர்ந்து 12 வயதே நிரம்பிய 5 விடலைகளைவைத்து ஒரு புதுப்படத்தை இயக்குகிறாராம் கஸ்தூரி.
சிறு வயதில் கிரிமினல்களாக மாறும் இளைஞர்கள் குறித்த கதையாம் இது.
இந்தப் படத்திற்கு 12 வயசு என்று பெயர் வைத்துள்ளார் கஸ்தூரி. தமிழ்ப்புத்தாண்டுக்குள் 2 படங்களை இயக்கி ரிலீஸ் செயயும் திட்டத்தில் உள்ளாராம் கஸ்தூரிராஜா.
தனுஷை வைத்து மீண்டும் இயக்கப் போவது எப்போதோ?
Comments


Click it and Unblock the Notifications