Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தொடங்கியது தமிழ் சினிமா -75
தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சினிமாவின் பவள விழா சிங்கப்பூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் பவள விழாவையொட்டி அதை பிரமாண்டமாக கொண்டாட தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நடிகர் சங்கத்துடன், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்டவையும் கை கோர்த்துள்ளன.பவள விழாவின் தொடக்க விழா சிங்கப்பூரில் உள்ள கோல்டன் வில்லேஜ் சினிமாஸ் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவின் சிறப்பம்சமாக எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படம் திரையிடப்பட்டது. இதுதவிர வீரபாண்டிய கட்டபொம்மன், ரத்தக் கண்ணீர், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, சூரிய வம்சம், சிவாஜி ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.
ஆகஸ்ட் 11ம் தேதி டாக்டர் சாலமன் பாப்பையா தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்தில், விஜய டி.ராஜேந்தர், சத்யராஜ், பாரதிராஜா, ஸ்ரீபிரியா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் மெகா ஸ்டார் நைட் நிழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பரில் மலேசியாவிலும், டிசம்பரில் அமெரிக்காவிலும் ஸ்டார் நைட் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு விழா நடைபெறுகிறது. இது ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற ரீதியிலான விழாவாக இல்லாமல் தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்யும் நிகழ்ச்சியாக அமையும் என விழா ஒருங்கிணைப்பாளரான ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவன தலைவரான நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!