twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவை ஏமாற்றிய இயக்குனர் திருடிய இதயத்தைப் படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்த ரோஹன், பட இயக்குனர் முரளி கிருஷ்ணா,தன்னிடம் ரூ. 47 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார்.நடிகை ஷெரீனின் முன்னாள் காதலர் தான் இந்த ரோஹன். இந்தக் காதலால் தான் ஷெரினீன் தமிழ் சினிமா வாழ்க்கையே ஊத்திக்கொண்டது.இதையடுத்து காதலை முறித்தார் ஷெரீன். இப்போது அவர் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.இந் நிலையில் தானும் ஹீரோவாக நினைத்த ரோஹன், அப்பா-அம்மா சேர்த்து வைத்த காசில் சுமார் ரூ. 60 லட்சத்தை தூக்கிகொண்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். தானே ஒரு படத்தைத் தயாரித்தார். படத்தின் பெயர் திருடிய இதயத்தை.இதில் தானே ஹீரோவாகவும் நடித்தார் ரோஹன். ஹீரோயினாக சுபா புஞ்சாவை புக் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்துபடத்தில் கவர்ச்சியில் கலக்கினர். இவர் மட்டும் பத்தாது என்று பிருந்தா என்று ஒரு மும்பைப் பறவையையும் கொண்டு வந்துஇறக்கையை (உடைகளை) குறைத்து படத்தில் குதியாட்டம் போட்டார் ரோஹன்.ரொம்ப கால இழுத்தடிப்புக்குப் பின்னர் சமீபத்தில் இந்தப் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது. ரிலீசுக்குக்கு கூட தனது சொந்தகாசைத் தான் செலவு செய்தார் ரோஹன். படம் பெரிய அளவில் பிளாப்பும் ஆகிவிட்டது.இந்தப் படத்தை பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா தான் இயக்கினார். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்படத்தை தயாரித்துத் தரும் பொறுப்பை முரளியிடம் தந்தார் ரோஹன்.இந் நிலையில் இப்போது, முரளி கிருஷ்ணா தன்னிடம் ரூ. 47 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக ரோஹன் புகார்கூறியுள்ளார்.ரோஹன் கூறுகையில், முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தைத் தயாரித்துக் கொடுக்குமாறு முரளி கிருஷ்ணாவைக் கேட்டுக்கொண்டேன்.படத்தை முடிக்க அவர் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார். படத் தயாரிப்புக்காக அடிக்கடி அவர் பணம் பெற்று வந்தார்.படத்தின் மொத்தச் செலவு ரூ. 1.30 கோடி என்று முரளி கிருஷ்ணா கூறினார். ஆனால் இதில் ரூ. 47 லட்சத்துக்கு கணக்கே இல்லை.அந்தப் பணத்தை அவர் மோசடி செய்து விட்டார். எனக்கு பெங்களூரில் பிசினஸ் இருப்பதால் தப்பித்தேன். வேறு யாராவது முரளிகிருஷ்ணாவிடம் மாட்டி இப்படி பணத்தை இழந்திருந்தால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார்ரோஹன். இதுதொடர்பாக தயாப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவுள்ளாராம்.முரளி கிருஷ்ணாவை தொடர்பு கொள்ளக் கூட ரோஹனால் முடியவில்லையாம். ஆள் செல்போன் நம்பரை மாற்றிவிட்டதோடு,அவரது அட்ரசிலும் இல்லையாம். ரொம்பவே நொந்து போய் இருக்கிறார் ரோஹன் தம்பி.ஊருல போய் பிஸினஸை பாருங்க தம்பி.

    By Staff
    |

    திருடிய இதயத்தைப் படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்த ரோஹன், பட இயக்குனர் முரளி கிருஷ்ணா,தன்னிடம் ரூ. 47 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார்.

    நடிகை ஷெரீனின் முன்னாள் காதலர் தான் இந்த ரோஹன். இந்தக் காதலால் தான் ஷெரினீன் தமிழ் சினிமா வாழ்க்கையே ஊத்திக்கொண்டது.

    இதையடுத்து காதலை முறித்தார் ஷெரீன். இப்போது அவர் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

    இந் நிலையில் தானும் ஹீரோவாக நினைத்த ரோஹன், அப்பா-அம்மா சேர்த்து வைத்த காசில் சுமார் ரூ. 60 லட்சத்தை தூக்கிகொண்டு பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். தானே ஒரு படத்தைத் தயாரித்தார். படத்தின் பெயர் திருடிய இதயத்தை.

    இதில் தானே ஹீரோவாகவும் நடித்தார் ரோஹன். ஹீரோயினாக சுபா புஞ்சாவை புக் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்துபடத்தில் கவர்ச்சியில் கலக்கினர். இவர் மட்டும் பத்தாது என்று பிருந்தா என்று ஒரு மும்பைப் பறவையையும் கொண்டு வந்துஇறக்கையை (உடைகளை) குறைத்து படத்தில் குதியாட்டம் போட்டார் ரோஹன்.


    ரொம்ப கால இழுத்தடிப்புக்குப் பின்னர் சமீபத்தில் இந்தப் படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது. ரிலீசுக்குக்கு கூட தனது சொந்தகாசைத் தான் செலவு செய்தார் ரோஹன். படம் பெரிய அளவில் பிளாப்பும் ஆகிவிட்டது.

    இந்தப் படத்தை பார்வை ஒன்றே போதுமே படத்தை இயக்கிய முரளி கிருஷ்ணா தான் இயக்கினார். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்படத்தை தயாரித்துத் தரும் பொறுப்பை முரளியிடம் தந்தார் ரோஹன்.

    இந் நிலையில் இப்போது, முரளி கிருஷ்ணா தன்னிடம் ரூ. 47 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக ரோஹன் புகார்கூறியுள்ளார்.

    ரோஹன் கூறுகையில், முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தைத் தயாரித்துக் கொடுக்குமாறு முரளி கிருஷ்ணாவைக் கேட்டுக்கொண்டேன்.


    படத்தை முடிக்க அவர் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டார். படத் தயாரிப்புக்காக அடிக்கடி அவர் பணம் பெற்று வந்தார்.படத்தின் மொத்தச் செலவு ரூ. 1.30 கோடி என்று முரளி கிருஷ்ணா கூறினார். ஆனால் இதில் ரூ. 47 லட்சத்துக்கு கணக்கே இல்லை.

    அந்தப் பணத்தை அவர் மோசடி செய்து விட்டார். எனக்கு பெங்களூரில் பிசினஸ் இருப்பதால் தப்பித்தேன். வேறு யாராவது முரளிகிருஷ்ணாவிடம் மாட்டி இப்படி பணத்தை இழந்திருந்தால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார்ரோஹன். இதுதொடர்பாக தயாப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவுள்ளாராம்.

    முரளி கிருஷ்ணாவை தொடர்பு கொள்ளக் கூட ரோஹனால் முடியவில்லையாம். ஆள் செல்போன் நம்பரை மாற்றிவிட்டதோடு,அவரது அட்ரசிலும் இல்லையாம். ரொம்பவே நொந்து போய் இருக்கிறார் ரோஹன் தம்பி.ஊருல போய் பிஸினஸை பாருங்க தம்பி.

      Read more about: director cheats actor rohan
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X