twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் பூஜை போட்டாச்சு!

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் 'கோச்சடையான்' பூஜை நேற்று முன்தினம் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டது.

    கே எஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கும் இந்த அனிமேஷன் 3 டி படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. சரத்குமார், கத்ரீனா, சினேகா, நாசர் என முன்னணிக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.

    கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கத்தை மேற்பார்வை செய்கிறார். Motion Capturing தொழில்நுட்பத்துடன் ஹாலிவுட் படம் 'அவதார்' போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது.

    இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக தீவிர ஈடுபட்டு வந்தனர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சௌந்தர்யா ரஜினி.

    இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் சனிக்கிழமை நடந்தது.

    இதுகுறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று மறக்க முடியாத நாள். மறக்க முடியாத தருணம். பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என கோச்சடையான் பூஜை. என் கணவர் மீண்டும் மேக்கப் நாற்காலியில்... கோச்சடையானுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்தார். அதேநேரம், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Superstar Rajinikanth's Kochadayan pojja was performed at their residence formally on Saturday and the make up artists painted the greese for the first time on Rajini's face after a gap.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X