Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'கற்பு'-சுஷ்மிதா மீது மதுரையில் வழக்கு
கிரீஷ்குமார் என்பவர் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரபல இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் அக்டோபர் மாதம் 7ம் தேதி தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியின்போது, இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பிறகும் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது தவறில்லை. இதெல்லாம் இன்றைய கால கட்டத்தில் சாதாரணமான ஒன்று. இந்தியர்கள் எவருக்கும் கற்பு இல்லை என்றார்.
அவரது பேச்சு என்னைப் இந்தியர்களின் மனதை புண்படுத்தி விட்டது. அவரது பேச்சை கேட்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து விடும்.
எனவே அவதூறாக பேட்டி கொடுத்த சுஷ்மிதாசென் மீது பாலியல் பற்றி மலிவாக விமர்சித்தல், அவதூறாக பேசுவது, பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, சுஷ்மிதா சென் வருகிற ஜனவரி 7ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஏற்கனவே தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேசிய நடிகை குஷ்பு பெரும் சர்ச்சைக்கு ஆளானார். அவர் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்டன. இப்போது கற்பு குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுஷ்மிதா.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!