Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோடிகளை நம்பியல்ல... தாடிகளை நம்பி எடுக்கும் படம்! - டி ராஜேந்தர்
மேலும் அடுத்த ஆண்டு தான் இயக்கும் படத்தில் அவரது இளைய மகன் குறளரசன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு தலைக்காதல்' சினிமா படப்பிடிப்பு நடத்த கொல்லிமலை முதல் இமயமலை வரை சென்று வந்தேன். இமயமலை சென்ற போது திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள நினைத்தேன். அதற்கு முன்பாக எங்கள் திருக்கயிலாய பரம்பரை, எங்கள் மண்ணின் குரு திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற வந்தேன்.
ஒரு தலைக்காதல் படம் கோடிகளை நம்பி எடுக்கும் படம் அல்ல. காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கும் படம். இந்த படம் வெளிப்புற படப்பிடிப்பில் தான் உருவாக போகிறது.
எனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து ஜாதக பொருத்தமுள்ள மணமகனை தேடி வருகிறேன். இலக்கியா திருமணம் முடிந்தவுடன் மூத்த மகன் நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெறும்.
அடுத்த ஆண்டு நான் இயக்க உள்ள படத்தில் எனது இளைய மகன் குறளரசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன்.
பதவிக்காக வாழ்வதா...
பொதுவாழ்க்கையில் என்னைப் போல தூய்மையான ஒருவனை காட்ட முடியுமா... ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இதைப்போல அன்றைய ஆட்சியாளர்கள் பதவியை துறக்க முன்வந்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
தமிழ் உணர்வு மங்கிவிட்டதா? பின்தங்கிவிட்டதா? என்ற கேள்வி தான் என் மனதில் எழுந்துள்ளது. பதவிக்காக மட்டும் வாழக்கூடாது. மக்கள் பணி மட்டுமே எங்கள் பணியாகும்," என்றார்.
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!