Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மீண்டும் விஜய் படம்...பேரரசு நம்பிக்கை!
வருடத்துக்கு மூன்றுபடம் என்ற தனது பழைய இலக்கை மீண்டும் புதுப்பித்துள்ள விஜய், அதன் படி இந்த வருடம் இன்னும் இரு படங்களை வெளியிடவுள்ளார். அடுத்து சுறா படமும், அதன் பிறகு காவல்காரனும் வெளியாக உள்ளன.
அதற்கடுத்த 3 படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் ஒருவர் பேரரசு.
இவர் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துவிட்டதால், தன் தந்தையைக் கூட கேட்காமல், பேரரசுவுக்கு வாக்கு கொடுத்துவிட்டாராம் விஜய். 'பாடிகார்ட் ரீமேக்கான காவல்காரன் முடிந்ததும் நம்ம படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்' என பேரரசிடம் கூறியுள்ளாராம்.
ஏற்கெனவே ஜெயம் ராஜா, சீமான், அமீர் என நிறைய பேருக்கு இதே போன்ற வாக்குறுதியைத் தந்துள்ளார் விஜய். இவர்களுக்கெல்லாம் முன்பே தங்கர் பச்சானுக்கு வாக்கு கொடுத்திருந்தார் விஜய், ஒன்பது ரூபாய் நோட்டு பட விழாவில்.
இவர்களில் யார் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் விஜய்க்கு மட்டுமே வெளிச்சம்!