Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பணமே குறியாக இருக்கும் நடிகர், நடிகையரே ஒதுக்கி வையுங்கள்-ராதாரவி
எஸ்.பி.சோலைராஜா தயாரித்து இயக்கும் நீயும் நானும் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,
நடிகர் நடிகைகள் கூடுதல் சம்பளம் வாங்குவதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்பினரும் வற்புறுத்தி வருகின்றனர். சம்பளத்தை நடிகர்கள் நிர்ணயிப்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.
குறிப்பிட்ட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் இருந்தால் படம் வெற்றிகரமாக ஓடும் என்று கருதி அவர்களை மொய்க்கின்றனர். நடிகருக்கு அதிகமான சம்பளத்தை அள்ளி கொடுக்கிறார்கள். அந்த நடிகர் மற்ற தயாரிப்பாளர்களிடமும் அதே அளவு கூடுதல் சம்பளத்தை வாங்குகிறார்.
தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்கும் இசையமைப்பாளர் டியூன் போட வெளிநாடுகளுக்கு போகிறார். தயாரிப்பாளர்களால்தான் இந்த குளறுபடிகள் நடக்கின்றன.
சம்பளம் அதிகம் கேட்கும் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோரை தயாரிப்பாளர்கள் ஒருவருடம் ஒதுக்கி வைத்தாலே போதும். வழிக்கு வந்துவிடுவார்கள். மார்க்கெட்டில் இல்லாமல் போய்விடுவோம் என்று பயந்து கொடுத்த சம்பளத்தை வாங்க ஓடிவருவார்கள்.
கேரளா, ஆந்திராவில் திரைப்படத் துறையினருக்குள் ஒற்றுமை உள்ளது. ஒரு நடிகர் தவறு செய்தால் அவரை துணிச்சலாக ஒதுக்கி வைக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தாலும் ஒன்றாக போராடுகிறார்கள். இங்கு அந்த நிலைமை இல்லை.
சம்பளம் அதிகம் கேட்பவர்களை 1 வருடம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு போய் டியூன் போடுவது பேஷனாகிவிட்டது. அவர்களையும் ஒதுக்கி வையுங்கள். அதன்பிறகு எல்லாம் சரியாக நடக்கும். இப்படி நான் பேசுவதால் எனக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்கலாம், அதுபற்றி கவலை இல்லை.
ஆங்கில படங்கள் திரையிடும் தியேட்டர்கள் 150 நாட்கள் தமிழ் படங்களையும் திரையிட வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படங்களை திரையிட வேண்டும் என்று அந்த தியேட்டர்கள் முன்பு போராட வேண்டும்.
சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படங்கள்தான் திரையிடப்படுகின்றது. சிறிய படங்களை வாங்குவது இல்லை. ஆனால் பெரிய நடிகர்கள் படங்கள் ஓரிரு நாட்களிலேயே முடங்கி விடுகின்றன. சிறிய படங்களை திரையிட மறுக்கும் தியேட்டர் முன்பு சிறுபட தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றார் ராதாரவி.