Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கேள்வி கேட்ட இயக்குநர் அதிரடி நீக்கம்... இது டைரக்டர் சங்க கலாட்டா!
இதன் பின்னணி பற்றி விசாரித்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி கோஷ்டியை எதிர்த்து தேர்தலில் நின்றவர் வேல்முருகன். ஆட்டோகிராப்பில் பிரதான காமெடியன் போல வந்தவர். இப்போதும் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மருதாச்சலம் என்ற படம் இப்போது இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கல்தா கொடுத்து அவரது எதிர்காலத்துக்கே உலை வைத்திருக்கிறது சங்கம்.
எதனால் இந்த நீக்கம்?
கடந்த வாரம் இந்த சங்கத்தின் சார்பாக நடந்த பொதுக்குழுவில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தாராம் வேல்முருகன். அதில்,
பதவிக்கு வந்து 100 நாட்களில் செய்வேன் என்று உறுதியளித்த திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதே, எப்போது நிறைவேற்றுவீர்கள்?
உங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் தேர்வு செய்தோம். நீங்களோ அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு சங்கத்தின் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்?
தமிழ் ஈழப் பிரச்சினையை உங்கள் தனிப்பட்ட செல்வாக்குக்காகப் பயன்படுத்திவிட்டீர்கள்..., என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தாராம் வேல் முருகன். இதுதான் பாரதிராஜாவையும் செல்வமணியையும் கோபத்தின் உச்சிக்கே போக வைத்துவிட்டதாம்.
உடனே ஒரு இயக்குநரை விட்டு தீர்மானத்தை கொண்டு வந்து வேல்முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறாரகள்.
"இப்படி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் முன் விளக்கம் தரக் கூட எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. முறையான அறிவிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் போல இஷ்டத்துக்கும் முடிவு எடுத்தால் எப்படி? சங்கத்துக்கு நான் உறுப்பினர் மட்டும்தான்... சங்க நிர்வாகிகளுக்கு அடிமையல்ல.
இப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் எனக்கு படங்கள் கிடைக்காமல் செய்து வாழ்வாதரத்தை பறிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோர்ட்டுக்குப் போய் விட்டார் வேல்முருகன்.
பாரதிராஜா, செல்வமணி இருவருக்கும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். தனக்கு ஆதரவான இயக்குனர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்துகிறார்.
இயக்குநர்கள் சங்கம் இதுபற்றி எந்த விளக்கமும் தர இதுவரை முன்வரவில்லை.
நியாயம் ஜெயிக்கும், அது யார் பக்கமிருந்தாலும்!