தேஜாஸ்ரீயின் வீட்டு பிரச்சனை சின்ன வீடா வரட்டுமா.. பெரிய வீடா வரட்டுமா என்று கேட்ட தேஜாஸ்ரீக்கு வீட்டுப் பிரச்சனை. அவர் வீட்டில் என்ன பிரச்சனைஎன்று கேட்காதீர்கள், வீடு தான் பிரச்சனையே.தான் வசித்து வந்த வீட்டின் வாஸ்து தனக்கு எதிராக மோஸ்து.. சாரி.. மோசம் செய்வதாகக் கருதிய தேஜாஸ்ரீ வீட்டையேஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிட்டு சொந்த ஊரான மும்பைக்குக்கே போய்விட்டார்.மும்பையில் புதிய வீடு வாங்கியதால் கொஞ்ச நாள் அதில் தங்கியிருக்க விரும்பி அங்கு போயிருப்பதாக சொன்னார்கள். ஆனால்,அப்படியே போனவர் சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை.வீட்டில் இருந்த தனது பொருட்களை எல்லாம் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் சொல்லி அப்படியே மும்பைக்குக் கொண்டுபோய்விட்டார்.தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும், அது நிறைவேறாது என்ற அசைக்க முடியாதநம்பிக்கை இன்னொரு புறமாக, சிங்கிள் பாட்டுக்கு ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் என்று வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.ஆனால், அந்த சிங்கள் டான்ஸ் வாய்ப்புக்களும் மளமளவென குறைந்து போய்விட, சென்னையில் மாதம் ரூ. 20,000க்குப் பிடித்தவீடு படு வேஸ்டாகப் பட்டதாம். மேலும் அதன் வாஸ்துவிலும் பிரச்சனை இருப்பதாகப் பட்டதாம்.இதனால் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு மும்பைக்குப் போய்விட்ட தேஜாஸ்ரீ பட சான்ஸ் கிடைத்தால் மட்டும் வந்துவிட்டுப்போகிறார்.சென்னை வந்து போக விமான, தங்கும், சாப்பிடும் செலவு, மேற்படி செலவு உள்ளிட்டவற்றை தயாரிப்பாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் படங்களை ஒப்புக் கொள்கிறார். ஒரு பாட்டுக்கு டான்ஸ் என்றாலும் ரூ. 4லட்சத்துக்குக் குறையாமல் சம்பளத்தைத் தேத்தி விடுகிறார்.சமீபத்தில் கள்வனின் காதலி படத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட மும்பையில் இருந்து வந்துவிட்டுப்போனார்.ஆட வந்து ஹோட்டல்களில் தங்கும்போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறாராம் தேஜாஸ்ரீ. எல்லாம் த்ரிஷாவின் பெயரைக்கெடுக்க கிளப்பப்பட்ட குளியல் வீடியோ பிரச்சனை தான் காரணமாம்.இப்போதைக்கு தேஜாஸ்ரீ அதிகம் நம்பியிருப்பது அவர் நடித்து முடித்துள்ள கோடம்பாக்கம் படம் தான். இதில் ஒருநடிகையாகவே நடித்திருக்கும் தேஜாஸ்ரீ தான் செகண்ட் ஹீரோயின். இதைத் தவிர சொல்லி அடிப்பேன் படத்தில் விவேக்குக்குஜோடியாக நடித்து முடித்துவிட்டார். படம் தான் ரிலீஸ் ஆக மாட்டேங்குது.
சின்ன வீடா வரட்டுமா.. பெரிய வீடா வரட்டுமா என்று கேட்ட தேஜாஸ்ரீக்கு வீட்டுப் பிரச்சனை. அவர் வீட்டில் என்ன பிரச்சனைஎன்று கேட்காதீர்கள், வீடு தான் பிரச்சனையே.
தான் வசித்து வந்த வீட்டின் வாஸ்து தனக்கு எதிராக மோஸ்து.. சாரி.. மோசம் செய்வதாகக் கருதிய தேஜாஸ்ரீ வீட்டையேஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிட்டு சொந்த ஊரான மும்பைக்குக்கே போய்விட்டார்.
மும்பையில் புதிய வீடு வாங்கியதால் கொஞ்ச நாள் அதில் தங்கியிருக்க விரும்பி அங்கு போயிருப்பதாக சொன்னார்கள். ஆனால்,அப்படியே போனவர் சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை.
வீட்டில் இருந்த தனது பொருட்களை எல்லாம் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் சொல்லி அப்படியே மும்பைக்குக் கொண்டுபோய்விட்டார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவு ஒருபுறம் இருந்தாலும், அது நிறைவேறாது என்ற அசைக்க முடியாதநம்பிக்கை இன்னொரு புறமாக, சிங்கிள் பாட்டுக்கு ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் என்று வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த சிங்கள் டான்ஸ் வாய்ப்புக்களும் மளமளவென குறைந்து போய்விட, சென்னையில் மாதம் ரூ. 20,000க்குப் பிடித்தவீடு படு வேஸ்டாகப் பட்டதாம். மேலும் அதன் வாஸ்துவிலும் பிரச்சனை இருப்பதாகப் பட்டதாம்.
இதனால் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு மும்பைக்குப் போய்விட்ட தேஜாஸ்ரீ பட சான்ஸ் கிடைத்தால் மட்டும் வந்துவிட்டுப்போகிறார்.
சென்னை வந்து போக விமான, தங்கும், சாப்பிடும் செலவு, மேற்படி செலவு உள்ளிட்டவற்றை தயாரிப்பாளர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் படங்களை ஒப்புக் கொள்கிறார். ஒரு பாட்டுக்கு டான்ஸ் என்றாலும் ரூ. 4லட்சத்துக்குக் குறையாமல் சம்பளத்தைத் தேத்தி விடுகிறார்.
சமீபத்தில் கள்வனின் காதலி படத்துக்கு எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட மும்பையில் இருந்து வந்துவிட்டுப்போனார்.
ஆட வந்து ஹோட்டல்களில் தங்கும்போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறாராம் தேஜாஸ்ரீ. எல்லாம் த்ரிஷாவின் பெயரைக்கெடுக்க கிளப்பப்பட்ட குளியல் வீடியோ பிரச்சனை தான் காரணமாம்.
இப்போதைக்கு தேஜாஸ்ரீ அதிகம் நம்பியிருப்பது அவர் நடித்து முடித்துள்ள கோடம்பாக்கம் படம் தான். இதில் ஒருநடிகையாகவே நடித்திருக்கும் தேஜாஸ்ரீ தான் செகண்ட் ஹீரோயின். இதைத் தவிர சொல்லி அடிப்பேன் படத்தில் விவேக்குக்குஜோடியாக நடித்து முடித்துவிட்டார். படம் தான் ரிலீஸ் ஆக மாட்டேங்குது.


Click it and Unblock the Notifications