Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தங்கருக்கே 'ஒன்பது ரூபாய் நோட்டு'!!
இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பும் முன்பாக புதுச்சேரிக்குச் செல்ல முடிவு செய்தார். காரணம் புதுச்சேரியிலிருந்துதான் தமிழகத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்கும் திருட்டு விசிடிகள் விநியோகம் அமோமாக நடந்து வருகிறது.
எனவே தனது ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் திருட்டு விசிடிக்கள் விற்பனை நடக்கிறதா என்பதை அறிய புதுச்சேரிக்கு விசிட் அடித்தார்.
குபேர் நகர் பகுதியில் கடை கடையாக சென்றார். அவரை இயக்குநர் என்று தெரியாத சிலர் சார், ஒன்பது ரூபாய் நோட்டு சிடி இருக்கிறது, வேண்டுமா என்று கேட்டுள்ளனர். அதிர்ந்து போன தங்கர், அந்தக் கடை முழுவதும் தீவிரமாக சோதனை போட்டார். அப்போது குவியல் குவியலாக ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவற்றின் திருட்டு விசிடிக்கள் சிக்கின.
மேலும் பல்வேறு புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களும் அங்கு இருந்தனன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் விசிடிக்களை ஒப்படைத்தார் தங்கர்.
இதேபோல நகரின் வேறு சில பகுதிகளிலும் அதிரடியாக சென்று சோதனை போட்டு திருட்டு விசிடிக்களைப் பிடித்தார். சமீபத்தில் வெளியான பல தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் படு சகஜமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்த அவர், புதுச்சேரியிலிருந்துதான் இந்தியா முழுவதும் திருட்டு விசிடிக்கள் போகின்றன.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியை விரைவில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன் என்றார் தங்கர்.