twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலம்ப விடும் தனுஸ்ரீ முளைச்சு மூனு இலை கூட விடாத தனுஸ்ரீ தத்தா கேட்கும் சம்பளத்தைப் பார்த்துதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பின்னங்கால் பிடறியில் பட தெறித்துஓடுகிறார்களாம். இந்தியில் அறிமுகமாகி அப்படியே தெலுங்குக்குத் தாவியவர் தனுஸ்ரீ தத்தா.இப்போது தமிழுக்கும் பாயத் தயாராகி வருகிறார்.சரி புள்ளை ஆசைப்படுதேன்னு சில தயாரிப்பாளர்கள் போய் பேசியுள்ளனர். ஆனால்ஆத்தா, தத்தா போடுகிற கண்டிஷன்கள், கேட்கும் சம்பளத்தைக் கேட்டு அரண்டு,மிரண்டு போய் ஓடி விடுகிறார்களாம்.கிங், கொக்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் அடுத்து சிபியை வைத்துஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தில் தனுஸ்ரீயை நடிக்க வைக்கபிரியப்பட்டுள்ளார். சரி என்று தயாரிப்பாளருடன், சாலமன் ஹைதராபாத்துக்கு வண்டிஏறினார். தனுஸ்ரீயைப் பார்த்து பேசியுள்ளனர்.எல்லாவற்றையும் சமர்த்தாக கேட்டுக்கொண்ட தனுஸ்ரீ சம்பளப் பேச்சை எடுத்தவுடன்கொஞ்சம் கித்தாப்பாக பேச ஆரம்பித்துள்ளார்.நானெல்லாம் ரொம்பப் பிசியான நடிகையாக்கும். காலையில் தெலுங்கு, மத்தியானம்இந்தி என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். இடையில் கிடைக்கிற கேப்பில்தான் உங்கபடத்துக்கு கால்ஷீட் கொடுக்கப்போகிறேன்.இதுக்கே நான் நிறைய பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். ஸோ, நீங்க ஒரு 50லட்சத்தை சம்பளமா தந்துட்டீங்கன்னா, மத்த படத்தையெல்லாம் ஓரம்கட்டி வச்சுட்டுஉங்க பின்னாடியே வந்துடுவேன் என்று டப்பாய்த்துள்ளார் தத்தா.அரண்டு போன தயாரிப்பாளரும், பிரபுசாலமனும் இந்த சங்காத்தமே வேண்டாம்னேஎன்று கூறியபடி எழுந்து சென்னைக்கு ஓடி வந்து விட்டார்களாம்.படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிபிக்கே 5 லட்சம்தான் சம்பளமாம். இந்த லட்சணத்தில்ஹீரோயினுக்கு 50 லட்சத்தை தூக்கி கொடுத்து விட்டு பிலிம்ரோல் வாங்க காசுக்குஎங்கே போவது என்று இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.இப்போது தத்தாவை கைகழுவிவிட்டு வேறு ஒரு நடிகைக்காக வலை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.புலம்ப விட்டுட்டியே தனுஸ்ரீ ஆத்தா.. ஸாரி தத்தா.

    By Staff
    |

    முளைச்சு மூனு இலை கூட விடாத தனுஸ்ரீ தத்தா கேட்கும் சம்பளத்தைப் பார்த்துதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பின்னங்கால் பிடறியில் பட தெறித்துஓடுகிறார்களாம்.

    இந்தியில் அறிமுகமாகி அப்படியே தெலுங்குக்குத் தாவியவர் தனுஸ்ரீ தத்தா.இப்போது தமிழுக்கும் பாயத் தயாராகி வருகிறார்.

    சரி புள்ளை ஆசைப்படுதேன்னு சில தயாரிப்பாளர்கள் போய் பேசியுள்ளனர். ஆனால்ஆத்தா, தத்தா போடுகிற கண்டிஷன்கள், கேட்கும் சம்பளத்தைக் கேட்டு அரண்டு,மிரண்டு போய் ஓடி விடுகிறார்களாம்.

    கிங், கொக்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் அடுத்து சிபியை வைத்துஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்தில் தனுஸ்ரீயை நடிக்க வைக்கபிரியப்பட்டுள்ளார். சரி என்று தயாரிப்பாளருடன், சாலமன் ஹைதராபாத்துக்கு வண்டிஏறினார். தனுஸ்ரீயைப் பார்த்து பேசியுள்ளனர்.

    எல்லாவற்றையும் சமர்த்தாக கேட்டுக்கொண்ட தனுஸ்ரீ சம்பளப் பேச்சை எடுத்தவுடன்கொஞ்சம் கித்தாப்பாக பேச ஆரம்பித்துள்ளார்.

    நானெல்லாம் ரொம்பப் பிசியான நடிகையாக்கும். காலையில் தெலுங்கு, மத்தியானம்இந்தி என்று ஓடிக்கொண்டிருக்கிறேன். இடையில் கிடைக்கிற கேப்பில்தான் உங்கபடத்துக்கு கால்ஷீட் கொடுக்கப்போகிறேன்.

    இதுக்கே நான் நிறைய பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். ஸோ, நீங்க ஒரு 50லட்சத்தை சம்பளமா தந்துட்டீங்கன்னா, மத்த படத்தையெல்லாம் ஓரம்கட்டி வச்சுட்டுஉங்க பின்னாடியே வந்துடுவேன் என்று டப்பாய்த்துள்ளார் தத்தா.

    அரண்டு போன தயாரிப்பாளரும், பிரபுசாலமனும் இந்த சங்காத்தமே வேண்டாம்னேஎன்று கூறியபடி எழுந்து சென்னைக்கு ஓடி வந்து விட்டார்களாம்.

    படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிபிக்கே 5 லட்சம்தான் சம்பளமாம். இந்த லட்சணத்தில்ஹீரோயினுக்கு 50 லட்சத்தை தூக்கி கொடுத்து விட்டு பிலிம்ரோல் வாங்க காசுக்குஎங்கே போவது என்று இன்னமும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

    இப்போது தத்தாவை கைகழுவிவிட்டு வேறு ஒரு நடிகைக்காக வலை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

    புலம்ப விட்டுட்டியே தனுஸ்ரீ ஆத்தா.. ஸாரி தத்தா.

      Read more about: thanusree loses tamil chance
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X