Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு ரூபாய் சில்லரை கேட்ட சினிமா கவிஞர்... அவர் எழுதிய ஒரு ரூபாய் ஹிட் பாடலை குறிப்பிட்ட கடைக்காரர்
சென்னை: தமிழ் சினிமா அவ்வப்போது இசையமைப்பாளர் பாடலாசிரியர் அடங்கிய சில இசை கூட்டணிகளை சந்திக்கும்.
Recommended Video
அந்த வகையில் தற்சமயம் பிரபலமாக இருப்பது இசையமைப்பாளர் இம்மான் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி கூட்டணி தான்.
மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்குராஜா, சீமா ராஜா, கும்கி, கயல், தொடரி என்று பல படங்களில் இருந்த ஹிட் பாடல்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளது.
Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!
பல்லாங்குழியின் வட்டம்
சினிமா பாடல் எழுதலாம் என்று சென்னைக்கு வந்த யுகபாரதிக்கு முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு தான் ஆனந்தம் திரைப்படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்பாடல் எழுதும் வாய்ப்பு. யுக பாரதியின் கவிதைகள் இயக்குநர் லிங்குசாமிக்கு பிடித்துப் போகவே அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அந்தப் படத்திலேயே மிக பிரபலமானது அந்தப் பாடல்தான்.
வாய்ப்பில்லாத காலம்
முதல் பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தவுடன் இனிமேல் தமிழ் சினிமாவில் நாம்தான் கொடிகட்டி பறக்க போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்த யுகபாரதிக்கு அடுத்த ஓராண்டிற்கு எந்த வாய்ப்பும் அமையவில்லையாம். மிகவும் மன வருத்தத்தில் இருந்தவருக்கு மீண்டும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமிதான். ஆனால் அதிலும் பிரச்சனைகளை சந்தித்துதான் பின்னர் வெற்றி பெற்ற பாடலாசிரியராக இப்போது வலம் வருகிறார்.
வித்யாசாகர் அனுகுமுறை
ரன் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் யுகபாரதியை அழைத்துச் சென்றிருக்கிறார் லிங்குசாமி. இவர் என்ன பாடல் எழுதியிருக்கிறார் என்று கேட்க பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலைச் சொல்ல எந்தவிதமான ரியாக்க்ஷனும் கொடுக்கவில்லையாம் அவர். அறிமுகத்திலேயே வித்யாசாகர் ஆளுமை தொணியில் பேசியது தன்னை மட்டும் தட்டுவது போலவே யுகபாரதிக்கு தோன்றி பாடல் எழுத மாட்டேன் என்று வந்துவிட்டாராம். அதன் பின்னர் லிங்குசாமி சமாதானப்படுத்தி எழுதிய பாடல் தான் காதல் பிசாசே. பாடலை பார்த்தவுடன் நான் உங்களை அப்படி பேசவில்லை என்றால் இப்படி ஒரு வித்யாசமான பாடல் வந்திருக்காட்து என்று பாராட்டியது மட்டுமில்லாமல் அதன் பிறகு தனது அனைத்து படங்களிலும் கிட்டத்தட்ட 300 பாடல்கள் எழுத வாய்ப்பளித்தாராம் வித்யாசாகர்.
கடைக்காரர்
இந்நிலையில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் ஹிட்டான சமயம் தான் குடியிருந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் ஒரு கடை இருந்ததாம். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு மீதம் ஒரு ரூபாய் சில்லறையை கடைக்காரரிடம் கேட்க, யுகபாரதியிடம்,"இந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் பையன் ஏதோ ஒரு ரூபாயை வைத்து பாடல் எழுதி இருக்கிறானாம்" என்று வித்தியாசமான தொணியில் கூற தன்னை பாராட்டுகிறாரா இல்லை திட்டுகிறாரா என்று புரியாமல் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வந்துவிட்டாராம். இதே போல மன்மதராசா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனபோது இவர்தான் அந்தப் பாடலை எழுதினார் என்று தெரியாமல் இவரை வைத்துக் கொண்டே இப்படி எல்லாம் பாடல்களை எழுதி சமூகத்தை நாசம் செய்கிறார்கள் என்று கூறுவார்களாம். இவரும் ஆமாம் என்பது போல் தலையாட்டிவிட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிடுவார் என்று யுகபாரதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!