Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கதையை மாற்றிய திருமா. அரசியலில் அணி மாற்றம் கண்டுள்ள திருமாவளவன் தான் நடித்து வந்தஅன்புத்தோழி படத்தின் கதையையும் மாற்றி விட்டார். கதையை மாற்றுவதை எதிர்த்தஇயக்குனரும் மாற்றப்பட்டுவிட்டார்.சினிமாவிலிருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். அதேபோல பலஅரசியல்வாதிகளும் சினிமாவில் நடித்துள்ளனர். அந்த வகையில், அரசியல்பாதையில் பீடு நடை போட்டு வரும் திருமாவளவன் அன்புத்தோழி என்ற படத்தில்நடித்து வருகிறார்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தமிழ்ப் போராளியாக இதில் நடிக்கிறார் திருமாவளவன்.இப்படத்தின் பாடல் கேசட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.பாடல்களை வெளியிட்டு விட்டாலும் கூட படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம்.ஏகப்பட்ட காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அரசியல் பணிகளில் திருமா.படு பிசியாக இருப்பதால் அவருக்கு ஓய்வு கிடைக்கும்போதுதான் படப்பிடிப்பைநடத்த முடிகிறதாம். இதனால் ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறதுஅன்புத்தோழி.இப்போது அன்புத்தோழியில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுககூட்டணியில் சேருவதற்கு முன்பு இருந்த கதையில், ஈழத் தமிழர் போராட்டத்திற்குஆதரவாகவும், தலித் விடுதலை தொடர்பாகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் இருந்ததாம்.ஆனால் இப்போதுதான் திருமா. வேறு பாதைக்கு போய் விட்டாரே.இதனால் தலித் விடுதலைக் கருத்துக்கள் இருந்தாலும் மற்ற விஷயங்களில் மாற்றங்களைச் செய்யுமாறுஇயக்குனரிடம் கூறியுள்ளார்.ஆனால் சொன்ன கதைப்படி எடுத்தால்தான் இப்படம் வெற்றி பெறும், உங்களதுகேரக்டரும் பொருத்தமாக இருக்கும். எனவே கதையை மாற்ற முடியாது என்றுஇயக்குனர் கூறியுள்ளார்.இருந்தாலும் விடாப்பிடியாக இருந்த திருமாவளவன் ஒரு வழியாக கதையில்ஏகப்பட்ட மாற்றங்களை செய்து விட்டாராம். இதனால் அதிருப்தியில் இருந்த இயக்குனர், படப்பிடிப்புக்கு வராமல் மக்கர்செய்துள்ளார்.இதனால் வேறு இயக்குனரைப் போட்டு படத்தை முடிக்க திருமா அன்புக் கட்டளைஇட்டாராம். அதனால் இயக்குனர் மாற்றப்பட்டு, எல்ஜிஆர் என்பவர் இயக்கிவருகிறாராம்.சமீபத்தில் பாண்டிச்சேரியில் கருணாஸ் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகளைசுட்டுள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு படத்தை ரிலீஸ் செய்து விட திருமாவற்புறுத்தியிருப்பதால் ஷூட்டிங்கை விரைவுபடுத்தியுள்ளனராம்.இப்போது அதிமுக அணிக்கு சாதகமான பல அம்சங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பிரசாரத்திற்கும் இப்படம் ரொம்பஉதவியாக இருக்கும் என திருமா தரப்பு சந்தோஷமாக கூறுகிறது.
அரசியலில் அணி மாற்றம் கண்டுள்ள திருமாவளவன் தான் நடித்து வந்தஅன்புத்தோழி படத்தின் கதையையும் மாற்றி விட்டார். கதையை மாற்றுவதை எதிர்த்தஇயக்குனரும் மாற்றப்பட்டுவிட்டார்.
சினிமாவிலிருந்து பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். அதேபோல பலஅரசியல்வாதிகளும் சினிமாவில் நடித்துள்ளனர். அந்த வகையில், அரசியல்பாதையில் பீடு நடை போட்டு வரும் திருமாவளவன் அன்புத்தோழி என்ற படத்தில்நடித்து வருகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தமிழ்ப் போராளியாக இதில் நடிக்கிறார் திருமாவளவன்.இப்படத்தின் பாடல் கேசட் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பாடல்களை வெளியிட்டு விட்டாலும் கூட படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம்.
ஏகப்பட்ட காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அரசியல் பணிகளில் திருமா.படு பிசியாக இருப்பதால் அவருக்கு ஓய்வு கிடைக்கும்போதுதான் படப்பிடிப்பைநடத்த முடிகிறதாம். இதனால் ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறதுஅன்புத்தோழி.
இப்போது அன்புத்தோழியில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுககூட்டணியில் சேருவதற்கு முன்பு இருந்த கதையில், ஈழத் தமிழர் போராட்டத்திற்குஆதரவாகவும், தலித் விடுதலை தொடர்பாகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் இருந்ததாம்.
ஆனால் இப்போதுதான் திருமா. வேறு பாதைக்கு போய் விட்டாரே.
இதனால் தலித் விடுதலைக் கருத்துக்கள் இருந்தாலும் மற்ற விஷயங்களில் மாற்றங்களைச் செய்யுமாறுஇயக்குனரிடம் கூறியுள்ளார்.
ஆனால் சொன்ன கதைப்படி எடுத்தால்தான் இப்படம் வெற்றி பெறும், உங்களதுகேரக்டரும் பொருத்தமாக இருக்கும். எனவே கதையை மாற்ற முடியாது என்றுஇயக்குனர் கூறியுள்ளார்.
இருந்தாலும் விடாப்பிடியாக இருந்த திருமாவளவன் ஒரு வழியாக கதையில்ஏகப்பட்ட மாற்றங்களை செய்து விட்டாராம்.
இதனால் அதிருப்தியில் இருந்த இயக்குனர், படப்பிடிப்புக்கு வராமல் மக்கர்செய்துள்ளார்.
இதனால் வேறு இயக்குனரைப் போட்டு படத்தை முடிக்க திருமா அன்புக் கட்டளைஇட்டாராம். அதனால் இயக்குனர் மாற்றப்பட்டு, எல்ஜிஆர் என்பவர் இயக்கிவருகிறாராம்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் கருணாஸ் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகளைசுட்டுள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு படத்தை ரிலீஸ் செய்து விட திருமாவற்புறுத்தியிருப்பதால் ஷூட்டிங்கை விரைவுபடுத்தியுள்ளனராம்.
இப்போது அதிமுக அணிக்கு சாதகமான பல அம்சங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பிரசாரத்திற்கும் இப்படம் ரொம்பஉதவியாக இருக்கும் என திருமா தரப்பு சந்தோஷமாக கூறுகிறது.