twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''அந்த நாள் ஞாபகம்''.... மீண்டும் பிறந்து வா செளந்தரராஜா!

    By Sudha
    |

    சென்னை: அந்தப் பக்கம் எம்.ஜி.ஆர்... இந்தப் பக்கம் சிவாஜி கணேசன்.. நடுவே ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என மேலும் சில குட்டிச் சிங்கங்கள். இத்தனை பேருக்கும் ஈடு கொடுத்து இனிக்க இனிக்க பல பாடல்களை இவர்களுக்காகவே பாடிச் சிகரம் தொட்டவர் டி.எம்.எஸ்.

    சிவாஜி, எம்.ஜி.ஆர். பாடும்போது அதை ரசிக்க மறந்து, டி.எம்.எஸ்ஸின் குரலை அதிகமாக ரசித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். காரணம், இவர்களின் நடிப்பைத் தூக்கிச் சாப்பிட்ட டி.எம்.எஸ்ஸின் குரல்.

    பாடல்தானே, பாடி விட்டுப் போவோமே என்றில்லாமல், அந்த நடிகர்களுக்கேற்றார் போல மாறி, குரலை மாற்றி, கிட்டத்தட்ட தானும் ஒரு நடிகனாக, அந்தப் பாத்திரமாக மாறி பாட்டுப் பிரளயம் ஏற்படுத்தியவர் டி.எம்.எஸ்.

    நிறையப் பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்

    அந்த நாள் ஞாபகம்

    அந்த நாள் ஞாபகம்

    சிவாஜி கணேசனின் பாடல்களில் இன்றளவும் அவரது ரசிகர்களை கட்டிப் போட்ட அட்டகாசமான பாட்டு இது. இதில் சிவாஜியின் நடிப்பு பேசப்பட்ட அளவுக்கு அதை பாடிய டி.எம்.எஸ்ஸின் குரலும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

    சிவாஜிக்குப் போட்டியாக

    சிவாஜிக்குப் போட்டியாக

    இந்தப் பாடலின்போது சிவாஜி நடந்தபடியும், சின்னதாக ஓடியபடியும் பாடுவார். தத்ரூபமாக அமைந்திருக்கும் அந்த நடிப்பு. அதே போல, பாடும்போது டி.எம்.எஸ்ஸும் மூச்சு இறைக்க இறைக்க பாடுவார். அதற்காக அவர் ரெக்கார்டிங் ரூமுக்குள், ஓடி வந்து ஓடி வந்து பாடியதாக குறிப்பிடுகிறார்கள். அதாவது சிவாஜியின் நடிப்புக்குபொருத்தமாக தனது குரல் இருக்க வேண்டும் என்பதற்காக தானும் ஓடியபடி பாடியதாக டி.எம்.எஸ். சொன்னாராம்.. என்ன ஒரு டிவோஷன்..

    சிவாஜியாக மாறி...

    சிவாஜியாக மாறி...

    இந்தப் பாடலில் சிவாஜியும், டி.எம்.எஸ்ஸும் இரண்டறக் கலந்திருப்பார்கள். குரலும், நடிப்பும், அப்படியே இருவராகவும் மாறிப் போயிருக்கும். உலகத்தில் இப்படி ஒரு பொருத்தமான பாவமும், குரலும், நடிப்பும், எத்தனை பேருக்கு வாய்க்கும்.. மிகவும் அபூர்வமானவர் டி.எம்.எஸ்.

    'எக்கோ' கொடுக்காட்டி பாட மாட்டேன்!

    'எக்கோ' கொடுக்காட்டி பாட மாட்டேன்!

    அதேபோல வசந்தமாளிகை படத்தில் வரும் பாடல். யாருக்காக இது யாருக்காக பாடலின்போது டி.எம்.எஸ்ஸின் ஆதிக்கம்தான் அதில் அதிகம் இருந்ததாம். அதாவது அந்தப் பாடலில் பல திருத்தங்களைக் கூறி அதை அமல்படுத்தினாராம் டி.எம்.எஸ். காரணம், இந்தப் பாடலில் இந்த திருத்தங்களைச் செய்தால்தான் அது சிவாஜியின் நடிப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினாராம். குறிப்பாக பாடலின் இடையே வரும் எக்கோ ... டி.எம்.எஸ். கொடுத்த ஐடியாவாம், முதலில் இதை படத் தயாரிப்பாளர் ஏற்கவில்லையாம். ஆனால் வைத்தால்தான் பாடுவேன் என்று கூறி விட்டாராம் டி.எம்.எஸ். பிறகென்ன பாட்டு சூப்பர் ஹிட்.

    தெய்வமே தெய்வமே...!

    தெய்வமே தெய்வமே...!

    அதேபோல சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் கலக்கிய தெய்வமகன் படத்தில் இடம் பெற்ற தெய்வமே தெய்வமே பாடல்... இன்றுகேட்டாலும் கூட பிரமிக்க வைக்கும் அந்தப் பாடலில் சிவாஜியும், டிஎம்.எஸ்ஸும் சேர்ந்து செய்திருக்கும் மாயாஜாலம். நடிப்பில் சிவாஜி பின்னியிருந்தார் என்றால், குரலில் டி.எம்.எஸ். கொடி நாட்டியிருப்பார். மிகப் பிரமாதமான டி.எம்.எஸ். பாடல்களில் இதுவும் ஒன்று.

    பாட்டுலகின் முதலாளி...!

    பாட்டுலகின் முதலாளி...!

    எம்.ஜி.ஆர். பாடல் என்றால் அதில் ஒரு ஸ்டைல். சிவாஜிக்கு ஒரு ஸ்டைல் என குரல் வித்தை காட்டியவர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர். பாடல்களில் டி.எம்.எஸ்ஸின் குரல் செம கம்பீரம் காட்டும். அதே போல சிவாஜிக்குப் பாடினால் அதில் நவரசம் வெளிப்படும். எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய பாடல்தான் ஆண்டவன்உலகத்தின் முதலாளி... என்ன ஒரு கம்பீரம் அந்தப் பாடலில். இப்போது கேட்டாலும் கூட மனசெல்லாம் இளகிப் போய் விடும்.

    பெண் போனால்..!.

    பெண் போனால்..!.

    இது பேஸ்புக், பீட்சா தலைமுறை... ஆனால் டீசிங்கில் அந்தக் காலத்திலேயே பின்னி எடுத்திருப்பார் டி.எம்.எஸ். நடித்த நடிகர்களை விட இவரது பாடல்தான் செம டிப்டாப்பாக இருக்கும அப்படிப்பட்ட பாடல்களில். பெண் போனால்..அந்தப் பெண் போனால்.. அவள் பின்னாலே என் கண் போகும்.. கண்ணை மூடிக் கொண்டு இப்போது கேட்டுப் பாருங்கள்.. உங்களுக்குள்ளும் அந்த ஃபீல் வரும்.. உங்களுக்கு எத்தனை வயதாக இருந்தாலும்.

    ஏன் பிறந்தாய் மகனே...!

    ஏன் பிறந்தாய் மகனே...!

    இதேபோல டி.எம்.எஸ். மெனக்கெட்டு நடித்த இன்னொரு பாடல் ஏன் பிறந்தாய் மகனே.. இந்தப் பாடலைக் கேட்டு அழாத, உருகாத நெஞ்சங்களே இருக்க முடியாது.. இயலாமையில் புழுங்கும் ஒரு தந்தையின் உள்ளக் குமுறலை சிவாஜி தனது நடிப்பில் கொட்டியிருந்தாலும், டிஎம்எஸ்ஸும் சேர்ந்து அதைப் பாடலில் வடித்துக் கொடுத்ததை எப்படி மறக்க முடியும்.... மனசு லேசாகத்தான் பாடல்கள் கேட்போம்.. ஆனால் இந்த ஜாம்பவானின் பாடலைக் கேட்கும்போது அழுது அழுது கேட்கலாம்.. அந்த அழுகையில் நமது ஆற்றாமையும் கூட அடித்துக் கொண்டு போய்விடும்...அப்படி ஒரு மிராக்கிள் கலைஞன் டிஎம்எஸ்.

    கண்ணதாசா நீ வரியை மாத்து ..அப்பதான் பாடுவேன்

    கண்ணதாசா நீ வரியை மாத்து ..அப்பதான் பாடுவேன்

    பாட்டரசன் கண்ணதாசனிடமே நீ எழுதியதைப் பாட மாட்டேன் என்று உரக்க் சொன்னவர் டி.எம்.எஸ். அந்தப் பாடல் கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அதில் முதலில் அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று எழுதியிருந்தாராம் கண்ணதாசன். அதைப் பார்த்த டி.எம்.எஸ். கண்ணதாசனைக் கூப்பிட்டு கவிஞரே இப்படிப் பாட முடியாது. மாத்திருங்க என்றாராம். ஏன் என்று கேட்டபோது கடவுளை எப்படிச் சாகச் சொல்லலாம் என்று கேட்டாராம். முடியாது என்றும் திட்டவட்டமாக சொல்லி விட்டாராம். இதையடுத்து வேறு வழியில்லாமல் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று வார்த்தையை மாற்றினாராம் கண்ணதாசன். அதன் பிறகு அந்தப் பாடலை, கண்ணதாசன் நினைத்த உணர்ச்சியுடன், அதே விரக்தி பாவத்துடன், வலிமையுடன் பாடி முடித்து நிறுத்தியபோது கண்ணதாசனே அசந்து போய் விட்டாராம்.

    உன் கண்ணில் நீர் வழிந்தால்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்

    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி... இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் கண்கள் கட்டிக் கொண்டு காதுகள் கணத்துப் போய் விடும். அப்படி ஒரு பாவம் இந்தப் பாடலின்போது டி.எம்.எஸ்ஸின் குரலில்...

    சொல்லிக் கொண்டே செல்லலாம் செளந்தரராஜன் பெருமையை.. மறுபடியும் பிறந்து வாருங்கள் டி.எம்.எஸ்.!

    English summary
    Here are some of TMS's memorable songs, which sizzled the minds of the fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X