ஸ்பெஷல்ஸ்

By Staff

தமிழகத்தின் queen of pop albums... என்று இசையுலகில் பேசப்படுபவர் "தக தைய்யா தைய்யா தைய்யா" படப்பாடல் மூலமாகசினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் -நிரந்தரமாக தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்ட மால்குடி சுபா.

சமீபத்தில் இவர் வெளியிட்ட "என்னைப்பாரு" என்கிற பாப் ஆல்பம்.. இவர் சூட்டிய பெயரைத்தாண்டி "வால்பாறைவட்டப்பாறை" ஆல்பம் இருக்கா என்கிற அளவிற்கு படுபரபரப்பானது. ஒரு முழு நீள சினிமாக்கதையை பத்து -நிமிட ஆல்பத்தில்சுருக்கி பலரை திகைக்கவும் ,ரசிக்கவும் வைத்தவர்.

மால்குடிசுபாவை சந்தித்தோம்.

வால்பாறை வட்டப்பாறை ஒரு டீம் ஒர்க். லதா மேனன் (ராஜீவ்மேனனின் மனைவி) டைரக்ஷன், ரவி.கே.சந்திரன் காமிரா,காதல்மதி பாட்டு , ராஜீ மியூசிக்.அதில் நிடித்த ஆர்டிஸ்ட் என்று அந்த குழு மிக நன்றாக அமைந்தது தான் அந்த ஆல்பத்தின்வெற்றி. அந்த ஆல்பத்தின் பெயர் என்னைப்பாரு. ஆனால் நாங்கள் சூட்டிய பெயரைச்சொல்லி எவருமே விசா-ரிப்பதில்லை.

வால்பாறை வட்டப்பாறை இருக்கான்னு கேட்டது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு ஆண்டவன் அருளும் ஒருகாரணம் என்-றார் -சு-பா.

கேள்வி: இசையுலகில் இந்திய இசைகளுக்கென்று தனி இடம் உண்டு. ரம்யமான பாடல்கள், மிக நுணுக்கமான இசை, இப்படி பலவிஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாமே, ஒரங்கட்டப்பட்டு இரைச்சல் இசை, தீடீரென்று டேப்பை ஆன் செய்தால்பி.பி எகிறுகிற மாதிரி சப்தம். இதைத்தான் இன்றைய தலை-முறையினரும் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. பழைய இசைநுணுக்கங்களும் இந்திய இசையில் உள்ள இனிமையும் காணாமல் போய்க்கொண்டிருப்பதாக -நினைக்கிறீர்களா?

பதில்: உண்மைதான். இந்திய இசை கர்நாடக இசையில் பல விஷயங்கள் பொக்கிஷமாய் மறைந்து இருக்கிறது. இன்னும்சொல்லப்போனால் கிராமங்களில் உள்ள இசை அருமையான விஷயம். மியூசிக்,கம்யூட்டர் அது இது என்று ஏதுமேயில்லாமல்..நாற்று -நடும் பொழு-து -நமது பெண்கள் ஏதாவது பாடுவார்களே அதில் இருக்கிறது இசையின் உயிர்த்துடிப்பு. சந்தோஷம்னா ஒருபாட்டு, துக்கம்னா ஒரு பாட்டு, இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு வெளிப்பாடுகள் என்று அமர்களமான பலவிஷயங்கள் இந்திய கிராமங்களில் பொதிந்து கிடக்கின்றன. இன்று காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானம் என்று கொஞ்சம் கொஞ்சமாககிராமத்து இசை பொக்கிஷங்கள் செத்துக்கொண்டிருப்பது வேதனையானது.

வால்பாறை வட்டப்பாறை..ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனதற்கு முக்கியகாரணமே.. கிராமப்பின்னனி, கிராமிய இசை, பாடலும் கூடகிராமத்தின் அடிப்படையிலேயே அமைந்தது தான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒன்று..கிராம இசை அழிந்துவிடாமல் காப்பது. இரண்டாவது..வியாபார-ரீதியாக அந்த இசையை கிராமத்தவர்களும் ச-ரி, --நகரத்தவர்களும் ரசிப்பார்கள்.வெஸ்டர்ன் மியூசிக் என்றால் -நன்றாக ஆங்கிலம் தெ-ரிந்தவர்களும், -நகரத்தினர் மட்டுமே ரசிக்க -முடியும். கிராம பின்னனிஇசையை பயன்படுத்துவதில் இந்த வியாபார தந்திரம் இருக்கிறது. கிராமத்து இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டும்.அவர்களை பிரும்மாண்டமாக மேடையேற்ற வேண்டும் என்கிற திட்டங்கள் என்னிடம் -நிறையவே உண்டு.

கேள்வி: தமிழ் திரையுலகில் இசைத்துறை எப்-ப-டி இ-ருக்-கி-ற-து?

பதில்: அருமையான வளர்ச்சி.. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா.. என்று பலர் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். கோலிவுட்-முதல் பாலிவுட் வரை இசைத்துறையில் உள்ளவர்கள் தமிழ் இசைக்கலைஞர்களை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாகஇசை என்று சொன்னால், பல வெளி-நாடுகளில் எம்.எஸ்.சுப்புலெஷ்மி பாட்டு ஏதாவது இன்னிக்கு கேட்டே ஆகணும் என்றுஅலுவலம் -முடிந்து ஒடுபவர்கள் -நிறைய பேர் இருக்கிறார்கள். பல திறமைசாலிகளை தமிழகம் கொடுத்திருக்கிறது. ஹாலிவுட்படங்களுக்கு இணையான கலைஞர்கள் இங்கேயும் உண்டு என்பதை உலகமே இன்று புரிந்து வைத்திருக்கிறது. சிம்பொனிஇசையமைக்கப்போகிறார் இளையராஜா என்றவுடன் இசையுலகமே .கண்களை உயர்த்தி வாயில் விரல் வைத்து பார்த்தது.திறமையான மனிதர்கள் இங்கே அதிகம்.

More from Filmibeat

Read more about: cinema malgudi suba singer songs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X