Don't Miss!
- News புதுக்கோட்டையில் ஞானசேகரன் வீட்டில் ஒரே அதிசயம்.. எல்லாரும் திரண்டு வந்துட்டாங்க.. ஆச்சரிய "குழந்தை"
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
--சிரஞ்சீவி -திரிஷா மோதல்? ஸ்டாலின் தெலுங்குப் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட மல்லிகா ஷெராவத்துக்கு ரூ. 1 கோடிசம்பளம் கொடுப்பதா என்று கேட்டு படத்தின் நாயகன் சிரஞ்சீவியுடன், நடிகை திரிஷா சண்டை போட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை திரிஷா மறுத்துள்ளார்.கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்டாலின் என்ற தெலுங்குப படத்தை இயக்கி வருகிறார். சிரஞ்சீவி, திரிஷாஜோடியில் உருவாகும் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகின்றனர்.இப்படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆட மல்லிகா ஷெராவத்தை அணுகியுள்ளனர். முதலில் பிகு செய்த மல்லிகாபின்னர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். நிச்சயம் ஒரு பாட்டுக்காக இவ்வளவு கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்துத்தான் அப்படி ஒரு தொகையை சொன்னார் மல்லிகா.ஆனால் முருகதாஸும், சிரஞ்சீவியும் மல்லிகா கேட்ட தொகைக்கு ஒத்துக் கொண்டு எப்ப வர்றீங்க என்று கேட்டுமல்லிகாவை திக்குக்காட வைத்து விட்டனர். மல்லிகா கேட்டதொகை முதலில் ரூ. 50 லட்சம் என்று கூறப்பட்டது.ஆனால் அது 1 கோடி என்று இப்போது தெரிய வந்துள்ளது.மல்லிகாவுக்கு ஒரே ஒரு பாட்டுக்காக ரூ. 1 கோடியைத் தருவதாக பேசப்பட்ட தகவல் திரிஷா காதுகளுக்கு எட்டஅவர் அப்செட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ரூ. 75 லட்சம்தான் சம்பளமாம். ஆனால் பிளாக்கையும்சேர்த்து 1 கோடி என்று கூறப்படுகிறது.முழுப் படத்தில் நடிக்கும் எனக்கே இவ்வளவுதான் சம்பளம், ஆனால் ஒரு பாட்டுக்காக 1 கோடி கொடுப்பதுநியாயமா என்று சிரஞ்சீவியிடம் கேட்டுள்ளார் திரிஷா. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம்நடந்ததாகவும் கூறப்படுகிறது.இச்செய்தியை திரிஷா மறுத்துள்ளார். முதலில் மல்லிகா ஷெராவத் இப்படத்தில் ஆடவே இல்லை. அப்படிஇருக்கும்போது நான் ஏன் சண்டை போட வேண்டும். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளார்திரிஷா. இதே போலத்தான் முருகதாஸும் கூறியுள்ளார்.அதேசமயம், வழக்கமாக திரிஷா வாங்கும் சம்பளத்தை விட குறைச்சலாகத்தான் இப்படத்தில் அவருக்கு சம்பளம்தரப்பட்டுள்ளதாம். இருப்பினும் திரிஷாவின் கடும் எதிர்ப்பு காரணமாகவே, மல்லிகாவை டிராப் செய்து விட்டனர்சிரஞ்சீவி, முருகதாஸ் என்று கூறுகிறார்கள்.இருந்தாலும் அந்த ஒத்தப் பாட்டில் படு குறியாக இருக்கும் முருகதாஸ், கேத்ரீனா கைப்பை அந்தப் பாட்டுக்குஆட வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.திரிஷாவின் உரிமைக் குரலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!
கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்டாலின் என்ற தெலுங்குப படத்தை இயக்கி வருகிறார். சிரஞ்சீவி, திரிஷாஜோடியில் உருவாகும் இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு ஆட மல்லிகா ஷெராவத்தை அணுகியுள்ளனர். முதலில் பிகு செய்த மல்லிகாபின்னர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். நிச்சயம் ஒரு பாட்டுக்காக இவ்வளவு கொடுக்கமாட்டார்கள் என்று நினைத்துத்தான் அப்படி ஒரு தொகையை சொன்னார் மல்லிகா.
மல்லிகாவுக்கு ஒரே ஒரு பாட்டுக்காக ரூ. 1 கோடியைத் தருவதாக பேசப்பட்ட தகவல் திரிஷா காதுகளுக்கு எட்டஅவர் அப்செட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ரூ. 75 லட்சம்தான் சம்பளமாம். ஆனால் பிளாக்கையும்சேர்த்து 1 கோடி என்று கூறப்படுகிறது.
முழுப் படத்தில் நடிக்கும் எனக்கே இவ்வளவுதான் சம்பளம், ஆனால் ஒரு பாட்டுக்காக 1 கோடி கொடுப்பதுநியாயமா என்று சிரஞ்சீவியிடம் கேட்டுள்ளார் திரிஷா. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம்நடந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், வழக்கமாக திரிஷா வாங்கும் சம்பளத்தை விட குறைச்சலாகத்தான் இப்படத்தில் அவருக்கு சம்பளம்தரப்பட்டுள்ளதாம். இருப்பினும் திரிஷாவின் கடும் எதிர்ப்பு காரணமாகவே, மல்லிகாவை டிராப் செய்து விட்டனர்சிரஞ்சீவி, முருகதாஸ் என்று கூறுகிறார்கள்.
திரிஷாவின் உரிமைக் குரலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!