திரிஷா-ஜெயம் ரவி ரசிகர்கள் மோதல்! திரிஷாவின் பேனர்களை ஜெயம் ரவியின் ரசிகர்கள் அப்புறப்படுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம், மோதலும் ஏற்பட்டது. இதனால் சென்னை தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.நடிகை திரிஷாவுக்கு அவரது பெண் ரசிகைகள் சேர்ந்து மன்றம் ஆரம்பித்துள்ளனர். அவருக்கு பேனர் கட்டி,திரிஷாவின் படத்திற்கு பாலாபிஷேகம் நடத்தி அசத்தினர். இந்த நிலையில் புதிதாக திரிஷா மன்றத்திற்க்கு தனிக்கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தையொட்டி அப்படம்திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஜெயம் ரவியை விட திரிஷாவுக்கே அதிக அளவிலான கட் அவுட்கள,பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதனால் ரவியின் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். குறிப்பாக கே.கே.நகரில் உள்ள உதயம் தியேட்டரில்திரிஷாவின் கட் அவுட்களும, பேனர்களும் தூள் கிளப்புகின்றன. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜெயம்ரவியின் ரசிகர்கள், திரிஷாவின் பேனர்களை அகற்றினர்.தகவல் அறிந்ததும் திரிஷாவின் ரசிகைகள், ரசிகர்கள விரைந்து வந்து ரவியின் ரசிகர்களுடன் கடும் வாக்குவாதம்செய்தனர். மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.இதையடுத்து ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ரவிக்குத் தகவல் போனது. அவர் உடனடியாக ரவி ரசிகர்மன்றநர்வாகிகளைக் கூப்பிட்டு பேனர்களை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்துமீண்டும் திரிஷா பேனர்கள் அதே இடத்தில் வைக்கப்பட்டன.இதையடுத்து திரிஷாவின் ரசிகர்கள் உற்சாகமாக கை தட்டி விசில் அடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.இதுகுறித்து ரசிகர் மன்றச் செயலாளர் ராமராஜன் கூறுகையில், நாங்கள் பாடுபட்டு இந்த பேனர்கள், கட்அவுட்களை வைத்தோம். ரசிகர் மன்றத் தலைவி ஜெஸ்ஸி நள்ளிரவு வரை தியேட்டரிலேயே இருந்து இதைபார்வையிட்டு வந்தார்.ஜெயம் ரவியின் பேனர்களை விட திரிஷாவின் பேனர்கள பெரிதாக இருந்ததால் ரவியின் ரசிகர்கள்பொறாமைப்பட்டு இப்படி நடந்து கொண்டுள்ளனர் என்றார்.போற போக்கைப் பார்த்தால் திரிஷா மன்றம் தேர்தலுக்கே தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

By Staff
திரிஷாவின் பேனர்களை ஜெயம் ரவியின் ரசிகர்கள் அப்புறப்படுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம், மோதலும் ஏற்பட்டது. இதனால் சென்னை தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை திரிஷாவுக்கு அவரது பெண் ரசிகைகள் சேர்ந்து மன்றம் ஆரம்பித்துள்ளனர். அவருக்கு பேனர் கட்டி,திரிஷாவின் படத்திற்கு பாலாபிஷேகம் நடத்தி அசத்தினர். இந்த நிலையில் புதிதாக திரிஷா மன்றத்திற்க்கு தனிக்கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தையொட்டி அப்படம்திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஜெயம் ரவியை விட திரிஷாவுக்கே அதிக அளவிலான கட் அவுட்கள,பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ரவியின் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். குறிப்பாக கே.கே.நகரில் உள்ள உதயம் தியேட்டரில்திரிஷாவின் கட் அவுட்களும, பேனர்களும் தூள் கிளப்புகின்றன. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜெயம்ரவியின் ரசிகர்கள், திரிஷாவின் பேனர்களை அகற்றினர்.

தகவல் அறிந்ததும் திரிஷாவின் ரசிகைகள், ரசிகர்கள விரைந்து வந்து ரவியின் ரசிகர்களுடன் கடும் வாக்குவாதம்செய்தனர். மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ரவிக்குத் தகவல் போனது. அவர் உடனடியாக ரவி ரசிகர்மன்றநர்வாகிகளைக் கூப்பிட்டு பேனர்களை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்துமீண்டும் திரிஷா பேனர்கள் அதே இடத்தில் வைக்கப்பட்டன.

இதையடுத்து திரிஷாவின் ரசிகர்கள் உற்சாகமாக கை தட்டி விசில் அடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.இதுகுறித்து ரசிகர் மன்றச் செயலாளர் ராமராஜன் கூறுகையில், நாங்கள் பாடுபட்டு இந்த பேனர்கள், கட்அவுட்களை வைத்தோம். ரசிகர் மன்றத் தலைவி ஜெஸ்ஸி நள்ளிரவு வரை தியேட்டரிலேயே இருந்து இதைபார்வையிட்டு வந்தார்.

ஜெயம் ரவியின் பேனர்களை விட திரிஷாவின் பேனர்கள பெரிதாக இருந்ததால் ரவியின் ரசிகர்கள்பொறாமைப்பட்டு இப்படி நடந்து கொண்டுள்ளனர் என்றார்.போற போக்கைப் பார்த்தால் திரிஷா மன்றம் தேர்தலுக்கே தயாரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X