'காம்ப்ரமைஸ்'... சக்சேனா மீதான இரு வழக்குகள் வாபஸ்!!

By Shankar

Hansraj Saxena
சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது போடப்பட்ட வழக்குகளில் இரண்டை வாபஸ் பெற்றுக் கொண்டனர் சேலம் விநியோகஸ்தர்கள் இருவர்.

மேலும் சன் பிக்சர்ஸுடன் தாம் சமாதானமாகப் போக விரும்புவதாகவும், இந்தப் பிரச்சினையில் தாங்கள் சமாதானமாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்சேனா மீது முதல் புகார் கொடுத்தவர் டிஎஸ் செல்வராஜ். இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை சேலம் விநியோகஸ்தர். இவர் தொடர்ந்து ரூ 83 லட்சம் மோசடி வழக்கில்தான் முதல்முறையாக சக்சேனா கைது செய்யப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து அதே சேலம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்ற விநியோகஸ்தரும் மோசடி வழக்கு தொடர்ந்தார் சக்சேனா மீது.

இந்த இருவருமே இப்போது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்துக்கு மனு கொடுத்துவிட்டனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் தங்களுக்கும் சமாதானம் ஏற்பட்டுவிட்டதால், இனி இந்த வழக்கு தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் மூன்று வழக்குகள் சக்சேனா மீது பாக்கியுள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று பண மோசடி குறித்தது. இரண்டு வழக்குகள் மிரட்டல், ஆள் கடத்தல் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சக்சேனாவை குண்டர் சட்டத்தில் தள்ள போலீஸ் முயற்சித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு வாபஸ் விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X