Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'காம்ப்ரமைஸ்'... சக்சேனா மீதான இரு வழக்குகள் வாபஸ்!!
மேலும் சன் பிக்சர்ஸுடன் தாம் சமாதானமாகப் போக விரும்புவதாகவும், இந்தப் பிரச்சினையில் தாங்கள் சமாதானமாகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்சேனா மீது முதல் புகார் கொடுத்தவர் டிஎஸ் செல்வராஜ். இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை சேலம் விநியோகஸ்தர். இவர் தொடர்ந்து ரூ 83 லட்சம் மோசடி வழக்கில்தான் முதல்முறையாக சக்சேனா கைது செய்யப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து அதே சேலம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்ற விநியோகஸ்தரும் மோசடி வழக்கு தொடர்ந்தார் சக்சேனா மீது.
இந்த இருவருமே இப்போது வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்துக்கு மனு கொடுத்துவிட்டனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் தங்களுக்கும் சமாதானம் ஏற்பட்டுவிட்டதால், இனி இந்த வழக்கு தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மூன்று வழக்குகள் சக்சேனா மீது பாக்கியுள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று பண மோசடி குறித்தது. இரண்டு வழக்குகள் மிரட்டல், ஆள் கடத்தல் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சக்சேனாவை குண்டர் சட்டத்தில் தள்ள போலீஸ் முயற்சித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு வாபஸ் விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.