twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    24 மணி நேர காதல்! ஹீரோ, ஹீரோயினை தொடாமல், தனது நிழல் கூட படாமல் காதலிக்கும்வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகியுள்ளது தொடாமலே.அந்தக் கால நடிகை சுமித்ராவின் மகள் உமா கல்யாணத்துக்கு முன் நடித்த கடைசிப்படம் தான் தொடாமலே. கன்னடத்தில் உருவான இப்படம் இப்போது தமிழுக்குதொடாமலே என்ற பெயரில் வெளியாகவுள்ளது.படத்தின் கதையை படு வித்தியாசமாக உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ராஜேந்திரகுமார். ஹீரோவாக நடித்திருப்பது நாகேந்திரா. 24 மணி நேரத்தில் பிறக்கும்காதல்தான் படத்தின் கதையாம்.இப்படத்தில்ஹீரோ நாகேந்திரா, உமாவை ஒரு காட்சியில் தொட்டுநடிக்கவில்லையாம். டூயட் பாட்டிலும் கூட இருவரும் தொட்டுக்கொள்ளாமலேயேநடித்துள்ளனராம்.அப்படி என்னதான் வித்தியாசமய்யா இந்தப் படத்தில் என்று ராஜேந்திர குமாரைக்கேட்டால், நள்ளிரவு 12 மணிக்கு ஹீரோயின் ரயிலில் வந்து இறங்குகிறார். ஒருநேர்முகத் தேர்வுக்காக வரும் அவருக்கு ஹீரோ நாகேந்திரா சில உதவிகளைச்செய்கிறார்.இந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. ஆனால் காதலைச் சொல்லமுடியாமல் தவிக்கிறார் ஹீரோ. அடுத்த நாள் நள்ளிரவில் தனது காதலைவெளிப்படுத்துகிறார். இந்த ஒரு நாள் நிகழ்வுகளைத்தான் படமாக்கியுள்ளேன்.இந்த இடைப்பட்ட 24 மணிநேரத்திற்குள் பாட்டு, சண்டைக்காட்சிகளும் உண்டு.அனைவரும் ரசிக்கும் படியான கதை இது. நிச்சயம் தமிழ் ரசிகர்களை கவரும்என்கிறார் ராஜேந்திரகுமார்.ஹீராவை, ஹீரோயின் தொடாமலே காதலிக்கலாம் தப்பில்லை. ஆனால் ரசிகர்கள்மனதில் படாமலேயே படம் போய் விடக்கூடாது. அதுதான் ரொம்ப முக்கியம்.

    By Staff
    |

    ஹீரோ, ஹீரோயினை தொடாமல், தனது நிழல் கூட படாமல் காதலிக்கும்வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகியுள்ளது தொடாமலே.

    அந்தக் கால நடிகை சுமித்ராவின் மகள் உமா கல்யாணத்துக்கு முன் நடித்த கடைசிப்படம் தான் தொடாமலே. கன்னடத்தில் உருவான இப்படம் இப்போது தமிழுக்குதொடாமலே என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

    படத்தின் கதையை படு வித்தியாசமாக உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ராஜேந்திரகுமார். ஹீரோவாக நடித்திருப்பது நாகேந்திரா. 24 மணி நேரத்தில் பிறக்கும்காதல்தான் படத்தின் கதையாம்.


    இப்படத்தில்ஹீரோ நாகேந்திரா, உமாவை ஒரு காட்சியில் தொட்டுநடிக்கவில்லையாம். டூயட் பாட்டிலும் கூட இருவரும் தொட்டுக்கொள்ளாமலேயேநடித்துள்ளனராம்.

    அப்படி என்னதான் வித்தியாசமய்யா இந்தப் படத்தில் என்று ராஜேந்திர குமாரைக்கேட்டால், நள்ளிரவு 12 மணிக்கு ஹீரோயின் ரயிலில் வந்து இறங்குகிறார். ஒருநேர்முகத் தேர்வுக்காக வரும் அவருக்கு ஹீரோ நாகேந்திரா சில உதவிகளைச்செய்கிறார்.

    இந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. ஆனால் காதலைச் சொல்லமுடியாமல் தவிக்கிறார் ஹீரோ. அடுத்த நாள் நள்ளிரவில் தனது காதலைவெளிப்படுத்துகிறார். இந்த ஒரு நாள் நிகழ்வுகளைத்தான் படமாக்கியுள்ளேன்.


    இந்த இடைப்பட்ட 24 மணிநேரத்திற்குள் பாட்டு, சண்டைக்காட்சிகளும் உண்டு.அனைவரும் ரசிக்கும் படியான கதை இது. நிச்சயம் தமிழ் ரசிகர்களை கவரும்என்கிறார் ராஜேந்திரகுமார்.

    ஹீராவை, ஹீரோயின் தொடாமலே காதலிக்கலாம் தப்பில்லை. ஆனால் ரசிகர்கள்மனதில் படாமலேயே படம் போய் விடக்கூடாது. அதுதான் ரொம்ப முக்கியம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X