Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தறுதலை வடிவேலு: உயிர் சாமி பாய்ச்சல்! ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்க மனோபாவத்தில் வந்தவர் என்ற காரணத்தால்தான்உயிர் படம் குறித்து தறுதலைத்தனமாக, அரைவேக்காட்டுத்தனமாக கருத்துவெளியிட்டுள்ளார் வடிவேலு என்று உயிர் பட இயக்குனர் சாமி காட்டமாககூறியுள்ளார்.சென்னையில் நடந்த தம்பி பட விழாவில் பேசிய வடிவேலு, உயிர் படத்தில்கொழுந்தனை அடைய அண்ணி துடிப்பது போல கதையமைத்தற்கு கடும் கண்டனம்தெரிவித்தார். இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்களை தூக்கிப் போட்டுமிதிக்கணும் என்று கோபமாக கூறியிருந்தார்.இதற்கு உயிர் பட இயக்குநர் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தறுதலைத்தனமாக பேசியுள்ள, அரைவேக்காடு வடிவேலுவுக்கு எனது வன்மையானகண்டனத்தை முதலில் தெரிவிக்கிறேன்.உயிர் படத்தால் நமது கலாச்சாரம் கெட்டுப் போச்சுன்னு சொல்ற வடிவேலு, இதற்குமுன்னாடி வந்த வாலி, ஆசை, பூமணி போன்ற படங்களைப் பார்ககவே இல்லையா?அந்தப் படங்களில் ஆண்கள் செய்த பாத்திரத்தை உயிர் படத்தில் ஒரு பெண்செய்திருக்கிறார். அதுதான் அவருக்குப் பிடிக்கவில்லை. காலம் காலமாக ஆண்கள்ஆயிரம் கல்யாணம் செய்து கொள்ளலாம்.ஆனால் பெண்கள் பத்தினியாகவே அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்கிறபழைய நம்பிக்கயிைல் ஊறி வளர்ந்தர் அவர்.ஆண்கள் வில்லனாக நடித்த மேற்கூறிய படங்களில இருந்த ஆபாசம், காமம,பெண்களை கேவலமாக சித்தரிப்பது போன்றவை எனது உயிரில் இல்லை.இம்சை அரசன் 23ம் புலிகேசி படம், உயிரின் ஏறுமுகத்தால் பாதிக்கப்படுகிறது என்றஉண்மையை வடிவேலுவால் ஜீரணிக்க முடியவில்லை. தனது ஹீரோ கனவு தகர்ந்துவிடுமமோ என்ற உண்மையை அவரால் தாங்க முடியவில்லை.அதனால்தான இப்படிப் பிதற்றுகிறார். பம்பரக்கண்ணாலே போன்ற படங்களில்அடுத்தவன் பெண்டாட்டியை கூட்டிக் கொடுப்பது, பள்ளிக் கூட பெண்ணைவீட்டுக்குள் தளளி பலாத்காரம் செயவது போன்ற மூன்றாம் தரக் காட்சிகளில் நடித்ததுகுறித்தது வைகைப் புயல் என்ன சொல்கிறார்?வடிவேலுவைப் பொறுத்தவரை குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர் என்பதுஇதிலிருந்தே தெரிந்து விட்டது. எனது கதாபாத்திரம் அருந்ததி போல, ஏதாவது ஒருஅண்ணி இப்படத்தைப் பார்த்தால் திருந்துவார்.அதனால் ஒரு காதலும், குடும்பமும் நலம் பெறும் என்ற நம்பிக்கையில்தான் உயிர்படத்தை எடுத்தேன். ஆனால் வடிவேலு போன்ற கெட்டவர்கள் திரித்துக் கூறி திசைதிருப்புகிறார்கள்.இனிமேலாவது வடிவேலுவும், அவரைப் போல் உள்ள ஆண்களும், பெண்களைசரிசமமாக மதிக்கக் கறறுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்க மனோபாவத்தில் வந்தவர் என்ற காரணத்தால்தான்உயிர் படம் குறித்து தறுதலைத்தனமாக, அரைவேக்காட்டுத்தனமாக கருத்துவெளியிட்டுள்ளார் வடிவேலு என்று உயிர் பட இயக்குனர் சாமி காட்டமாககூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தம்பி பட விழாவில் பேசிய வடிவேலு, உயிர் படத்தில்கொழுந்தனை அடைய அண்ணி துடிப்பது போல கதையமைத்தற்கு கடும் கண்டனம்தெரிவித்தார். இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்களை தூக்கிப் போட்டுமிதிக்கணும் என்று கோபமாக கூறியிருந்தார்.
தறுதலைத்தனமாக பேசியுள்ள, அரைவேக்காடு வடிவேலுவுக்கு எனது வன்மையானகண்டனத்தை முதலில் தெரிவிக்கிறேன்.
உயிர் படத்தால் நமது கலாச்சாரம் கெட்டுப் போச்சுன்னு சொல்ற வடிவேலு, இதற்குமுன்னாடி வந்த வாலி, ஆசை, பூமணி போன்ற படங்களைப் பார்ககவே இல்லையா?
அந்தப் படங்களில் ஆண்கள் செய்த பாத்திரத்தை உயிர் படத்தில் ஒரு பெண்செய்திருக்கிறார். அதுதான் அவருக்குப் பிடிக்கவில்லை. காலம் காலமாக ஆண்கள்ஆயிரம் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
ஆனால் பெண்கள் பத்தினியாகவே அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்கிறபழைய நம்பிக்கயிைல் ஊறி வளர்ந்தர் அவர்.
ஆண்கள் வில்லனாக நடித்த மேற்கூறிய படங்களில இருந்த ஆபாசம், காமம,பெண்களை கேவலமாக சித்தரிப்பது போன்றவை எனது உயிரில் இல்லை.
அதனால்தான இப்படிப் பிதற்றுகிறார். பம்பரக்கண்ணாலே போன்ற படங்களில்அடுத்தவன் பெண்டாட்டியை கூட்டிக் கொடுப்பது, பள்ளிக் கூட பெண்ணைவீட்டுக்குள் தளளி பலாத்காரம் செயவது போன்ற மூன்றாம் தரக் காட்சிகளில் நடித்ததுகுறித்தது வைகைப் புயல் என்ன சொல்கிறார்?
வடிவேலுவைப் பொறுத்தவரை குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர் என்பதுஇதிலிருந்தே தெரிந்து விட்டது. எனது கதாபாத்திரம் அருந்ததி போல, ஏதாவது ஒருஅண்ணி இப்படத்தைப் பார்த்தால் திருந்துவார்.
இனிமேலாவது வடிவேலுவும், அவரைப் போல் உள்ள ஆண்களும், பெண்களைசரிசமமாக மதிக்கக் கறறுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!