twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிர் பிரச்சனை கணவரின் தம்பியை அண்ணி அடையத் துடிப்பது போன்ற காட்சிகள் நிரம்பிய உயிர்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும்ாகரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீகாந்த், ஷம்ருதா, பிதாமகன் சங்கீதா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம்உயிர். இப்படத்தில் ஸ்ரீகாந்த்தின் அண்ணியாக நடித்துள்ளார் சங்கீதா.அதுவும் எப்படி? கொழுந்தன் ஸ்ரீகாந்த் மீது காம வெறி கொள்கிறார் அண்ணி சங்கீதா.இது அவரது கணவருக்குத் தெரிய வர அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின்னர் தனது அடையும் முயற்சியை வேகப்படுத்துகிறார் சங்கீதா. இப்படிப்போகின்றன காட்சிகள்.புதுமுக இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள உயிர் படத்தில் கொழுந்தனைஅடைய அண்ணி அலைவது போல சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இப்படத்தின் விளரம்பரத்திலும், அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டிஎன்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றன. இதை போலீஸாரும் எதிர்த்தனர்.தணிக்கைக் குழுவிலும் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த வாசகங்கள்அகற்றப்பட்டன.இப்போது படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்குகடிதம் எழுதியுள்ளார்.மேலும் இப்படத்திற்கு சான்றிதழ் கொடுத்ததை கண்டித்து தணிக்கை வாரியத்திற்கும்கடிதம் எழுதியுள்ளார்.இதேபோல அனைத்திந்திய மாதர் சங்க பொருளாளர் ஜான்சிராணியும் இந்தப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

    By Staff
    |

    கணவரின் தம்பியை அண்ணி அடையத் துடிப்பது போன்ற காட்சிகள் நிரம்பிய உயிர்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும்ாகரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீகாந்த், ஷம்ருதா, பிதாமகன் சங்கீதா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம்உயிர். இப்படத்தில் ஸ்ரீகாந்த்தின் அண்ணியாக நடித்துள்ளார் சங்கீதா.

    அதுவும் எப்படி? கொழுந்தன் ஸ்ரீகாந்த் மீது காம வெறி கொள்கிறார் அண்ணி சங்கீதா.இது அவரது கணவருக்குத் தெரிய வர அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின்னர் தனது அடையும் முயற்சியை வேகப்படுத்துகிறார் சங்கீதா. இப்படிப்போகின்றன காட்சிகள்.

    புதுமுக இயக்குனர் சாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள உயிர் படத்தில் கொழுந்தனைஅடைய அண்ணி அலைவது போல சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இப்படத்தின் விளரம்பரத்திலும், அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டிஎன்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றன. இதை போலீஸாரும் எதிர்த்தனர்.

    தணிக்கைக் குழுவிலும் புகார் செய்யப்பட்டது. பின்னர் இந்த வாசகங்கள்அகற்றப்பட்டன.

    இப்போது படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்குகடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் இப்படத்திற்கு சான்றிதழ் கொடுத்ததை கண்டித்து தணிக்கை வாரியத்திற்கும்கடிதம் எழுதியுள்ளார்.

    இதேபோல அனைத்திந்திய மாதர் சங்க பொருளாளர் ஜான்சிராணியும் இந்தப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X