Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ் தன்னால் வளரும்! - கவிஞர் வாலி
விஷ்ணு - பியா நடிக்க, சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பலே பாண்டியா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் இன்று நடந்தது. பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் இந்த விழாவிலும் தவறாமல் ஆஜராகியிருந்தனர்.
ஒரு மாறுதலுக்காக படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை வைத்தே ஆடியோவை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் வாலி பேசியது:
"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுகத்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..." என்றார்.