twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் தன்னால் வளரும்! - கவிஞர் வாலி

    By Sudha
    |

    Vaali
    தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. அது என்னைப் போன்ற கவிஞர்களை நம்பியில்லை. தானே வளரும் என்று கவிஞர் வாலி கூறினார்.

    விஷ்ணு - பியா நடிக்க, சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பலே பாண்டியா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் இன்று நடந்தது. பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.

    தமிழ் சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் இந்த விழாவிலும் தவறாமல் ஆஜராகியிருந்தனர்.

    ஒரு மாறுதலுக்காக படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை வைத்தே ஆடியோவை வெளியிட்டனர்.

    நிகழ்ச்சியில் கவிஞர் வாலி பேசியது:

    "தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுகத்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..." என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X