twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிர் சாமியை ஒழிப்பேன்- வடிவேலு உயிர் படத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவேன். இந்தப் படத்தை இயக்கியஇயக்குர் சாமியை ஒழித்துக் கட்டாமல் ஓய மாட்டேன். இதற்காக நீதிமன்றத்திற்கும்போகவும் தயாராக இருக்கிறேன் என்று வைகைப் புயல் வடிவேலு சீறியுள்ளார்.உயிர் போன்ற ஒழுக்கக் கேடான படத்தை எடுத்தவர்களை தூக்கிப் போட்டுமிதிக்கணும். அவர்களை ரோட்டில் ஓட ஓட விரட்டியடிக்கணும் என்று தம்பி படவிழாவில் வடிவேலு படு ஆக்ரோஷமாக பேசினார் வடிவேலு.இதையடுத்து வடிவேலு தறுதலைத் தனமாக பேசுவதாக உயிர் பட இயக்குனர் சாமிபடு காட்டமாக பதிலடி கொடுத்தார். இந் நலையில் சாமிக்கு வடிவேலு கடுமையானபதில் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியின்கதைதான் உயிர் படத்தின் கதை. அப்பன், ஆத்தா, அண்ணன், தம்பி என்று பல்வறுபரிமாணங்கள் கொண்ட தொப்புள் கொடி உறவுகளோடு, பிறந்த நானும், இந்தப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.நான் மட்டும் அல்ல தமிழகத்தில் பிறந்த அத்தனை பேருமே அண்ணியைஅம்மாவகாத்தான் நினைக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அண்ணியைகாமுகியாகக் காட்டியிருக்கிறார்கள்.வெடிகுண்டு வைத்துப் பல பேரைக் கொல்லும் தீவிரவாதியை விட மோசமானகாரியம் இது. அதை இந்த டைரக்டர் செய்துள்ளார். அவரது சிந்தனை பற்றிநண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசினேன். அந்த உணர்வுகளைத் தான் தம்பி படவிழாவில் வெளியிட்டேன்.அய்யா, நான் படிக்காதவன்தான். நடிப்பைக் கூட இப்போதுதான் கற்றுக் கொண்டுவருகிறேன். ஆனால் இந்த மண்ணின் பாசம், பண்பு, கலாச்சாரம் எல்லாம் என்ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது. அதனால்தான் உயிர் படத்தைப் பார்த்ததும் எனதுரத்தம் கொதித்தது.உயிர் படத்தைத் தொடர்ந்து, அந்த டைரக்டர் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கும்இதுபோன்ற முறையற்ற உறவு முறையை வெளிப்படுத்துவது போன்ற கதையைதயார் செய்வதாக கேள்விப்பட்டேன்.கஞ்சா செடிக்கு இணையான சிந்தனையை அவர் வளர்த்து வருகிறார்.உயிர் படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும். தமிழ்த்தாயின் மூத்த குடிமனானகலைஞர் இதைச் செயய வேண்டும். இப்படிப்பட்ட ஆபாசமான படத்தைஎடுத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.என்னை அரைவேக்காடு என்று கூறியுள்ளார் அந்த டைரக்டர். பம்பரக் கண்ணாலேபடத்தில் நான் தவறாக நடித்ததாகக் கூறியுள்ளார். அந்தத் தவறுக்கு அடி வாங்குவதுபோல காட்சியும் படத்தில் இருந்தது.ஏடாகூடமான கதையைப் படமாக்கி விட்டு அதை நியாயப்படுத்துவதை இந்தஅரைவேக்காடு அனுமதிக்காது.இந்தப் பெண்கள் அமைப்புகள் இந்தப் படத்தைப் பார்க்காதது ஏன் என்று எனக்குவிளங்கவில்லை. நஞ்சை விதைத்துள்ள இந்த ஆளை ஒழித்துக் கட்டுவதுதான் எனதுமுதல் வேலை. இதற்காக கோர்ட்டுக்குப் பாகக் கூட நான் தயாராக இருக்கிறேன்.எப்படியாவது உயிர் படத்தைத் தடை செய்வேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்வடிவேலு.

    By Staff
    |

    உயிர் படத்தை எப்படியாவது தடுத்து நிறுத்துவேன். இந்தப் படத்தை இயக்கியஇயக்குர் சாமியை ஒழித்துக் கட்டாமல் ஓய மாட்டேன். இதற்காக நீதிமன்றத்திற்கும்போகவும் தயாராக இருக்கிறேன் என்று வைகைப் புயல் வடிவேலு சீறியுள்ளார்.

    உயிர் போன்ற ஒழுக்கக் கேடான படத்தை எடுத்தவர்களை தூக்கிப் போட்டுமிதிக்கணும். அவர்களை ரோட்டில் ஓட ஓட விரட்டியடிக்கணும் என்று தம்பி படவிழாவில் வடிவேலு படு ஆக்ரோஷமாக பேசினார் வடிவேலு.

    இதையடுத்து வடிவேலு தறுதலைத் தனமாக பேசுவதாக உயிர் பட இயக்குனர் சாமிபடு காட்டமாக பதிலடி கொடுத்தார். இந் நலையில் சாமிக்கு வடிவேலு கடுமையானபதில் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியின்கதைதான் உயிர் படத்தின் கதை. அப்பன், ஆத்தா, அண்ணன், தம்பி என்று பல்வறுபரிமாணங்கள் கொண்ட தொப்புள் கொடி உறவுகளோடு, பிறந்த நானும், இந்தப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    நான் மட்டும் அல்ல தமிழகத்தில் பிறந்த அத்தனை பேருமே அண்ணியைஅம்மாவகாத்தான் நினைக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அண்ணியைகாமுகியாகக் காட்டியிருக்கிறார்கள்.

    வெடிகுண்டு வைத்துப் பல பேரைக் கொல்லும் தீவிரவாதியை விட மோசமானகாரியம் இது. அதை இந்த டைரக்டர் செய்துள்ளார். அவரது சிந்தனை பற்றிநண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசினேன். அந்த உணர்வுகளைத் தான் தம்பி படவிழாவில் வெளியிட்டேன்.

    அய்யா, நான் படிக்காதவன்தான். நடிப்பைக் கூட இப்போதுதான் கற்றுக் கொண்டுவருகிறேன். ஆனால் இந்த மண்ணின் பாசம், பண்பு, கலாச்சாரம் எல்லாம் என்ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறது. அதனால்தான் உயிர் படத்தைப் பார்த்ததும் எனதுரத்தம் கொதித்தது.

    உயிர் படத்தைத் தொடர்ந்து, அந்த டைரக்டர் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கும்இதுபோன்ற முறையற்ற உறவு முறையை வெளிப்படுத்துவது போன்ற கதையைதயார் செய்வதாக கேள்விப்பட்டேன்.

    கஞ்சா செடிக்கு இணையான சிந்தனையை அவர் வளர்த்து வருகிறார்.

    உயிர் படத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும். தமிழ்த்தாயின் மூத்த குடிமனானகலைஞர் இதைச் செயய வேண்டும். இப்படிப்பட்ட ஆபாசமான படத்தைஎடுத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.

    என்னை அரைவேக்காடு என்று கூறியுள்ளார் அந்த டைரக்டர். பம்பரக் கண்ணாலேபடத்தில் நான் தவறாக நடித்ததாகக் கூறியுள்ளார். அந்தத் தவறுக்கு அடி வாங்குவதுபோல காட்சியும் படத்தில் இருந்தது.

    ஏடாகூடமான கதையைப் படமாக்கி விட்டு அதை நியாயப்படுத்துவதை இந்தஅரைவேக்காடு அனுமதிக்காது.

    இந்தப் பெண்கள் அமைப்புகள் இந்தப் படத்தைப் பார்க்காதது ஏன் என்று எனக்குவிளங்கவில்லை. நஞ்சை விதைத்துள்ள இந்த ஆளை ஒழித்துக் கட்டுவதுதான் எனதுமுதல் வேலை. இதற்காக கோர்ட்டுக்குப் பாகக் கூட நான் தயாராக இருக்கிறேன்.எப்படியாவது உயிர் படத்தைத் தடை செய்வேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்வடிவேலு.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X