Don't Miss!
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்பு படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் தம்பி... எந்தப் படம் தெரியுமா?
சென்னை: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.
லைக்கா நிறுவனத்திற்காக மட்டுமே ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த சகோதரர் ஒருவர் யூடியூபில் கொடுத்த பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகி உள்ளது.
அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?
மதுரை வட்டார வழக்கு
சினிமாவில் மதுரை வட்டார வழக்கை பிரபலப்படுத்தியவர் நடிகர் வடிவேலு. தேவர் மகன் படத்தில் நடிக்கும் பொழுது நடிகர் சிவாஜி கணேசனே என்னை விட இவன் சிறப்பாக மதுரை வட்டாரம் பேசுகிறான் என்று கமலிடம் வடிவேலுவை பற்றி பாராட்டினாராம். சமீபத்தில் கூட விருமன் படத்தின் புரோமோஷனில், நமக்காக வடிவேலு சார் மதுரை வட்டார வழக்கை கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பேசியிருந்தார்.
மதுரை அல்ல சிவகங்கை
அப்படிப்பட்ட வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை கிடையாதாம், சிவகங்கையாம். அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவருமே கண்ணாடி கடையில் வேலை பார்த்தவர்கள். அதனால் வடிவேலு சிறுவயதில் இருக்கும் போது அவரது தந்தை மதுரைக்கு கண்ணாடி கடையில் வேலை பார்ப்பதற்காக அழைத்து வந்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நடிகர் வடிவேலுவும் கூட கண்ணாடி கடையில் வேலை பார்த்து மேடை நாடகங்களில் நடித்து அதன் பின்னர் தான் சினிமாவில் வாய்ப்பு தேடி நடிகரானாம். வடிவேலுவிற்கு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருக்கிறார்கள்.
பொறுப்பான அண்ணன்
தன் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நன்கு பார்த்துக் கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்தவர் வடிவேல் என்று அவருடைய தம்பி கூறியுள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் அனைவரையும் எப்போதும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம். இயற்கையாகவே அவருடைய உடல் நகைச்சுவைக்காக உருவானது என்று வடிவேலுவின் தம்பி கூறியுள்ளார்.
சிம்பு படம்
இந்தத் தகவல்கள் அனைத்தையும் கூறியது அவருடைய இரண்டாவது தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர். இவரும் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படம். சொத்து பிரச்சனை காரணமாக தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் சினிமாவில் தொடர முடியவில்லை என்றும் இப்போது ஜவுளிக்கடை பிசினஸ் நடத்தி வருவதாகவும் அவ்வப்போது சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்பு தன்னை தேடி வந்தாலும் அதனை தவிர்த்து விட்டு பிசினஸில் கவனம் செலுத்துவதாக வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.