அழகிய பொய்கள் கே.பாலசந்தரின் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் பொய் படத்துக்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு கவிதைபடு கிளாசிக்காக வந்துள்ளதாம்.பாலசந்தரின் படங்கள் என்றால் வைரமுத்துவின் பேனா ஒரு மடக்கு தேனையும் பல மடக்கு புதிய சிந்தனைகைளையும் கலந்துஅடித்துவிட்டு எழுத உட்காரும். முதல் வரியோடு அடுத்த வரியை போட்டிபோட வைப்பார் கவியரசு.ஒரு நாள் இவரிடம் பொய் படத்தின் கதையை விலாவாரியாகச் சொன்ன கே.பி, பொய்யை வைத்து ஒரு கவிதை படைக்கச்சொன்னாராம். பொய் குறித்த கவிதாய்வாக அது இருக்க வேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்தாராம்.பொய்யில்லாமல் உலகம் இல்லை, சில பொய்கள் மிகுந்த மதிப்பு மிக்கவை. சில நேரங்களில் நல்ல பொய்கள்தேவைப்படுகின்றன. ஏன், புகழ்ச்சி கூட பொய் தானே. அழகான பொய்களை பட்டியலிட்டு கவிதையாய் தருகிறேன் என்றுபாலசந்தரிடம் கூறிவிட்டு, என்று கிளம்பிப் பேனாராம்.மறுநாள் கவிதையோடு வந்த கவிஞரிடம் ஆர்வமாய் பேப்பரை வாங்கிப் படித்த கே.பி அவரை கட்டிப் பிடித்துபாராட்டியிருக்கிறார்.நாளை முதல் குடிப்பதில்லை..புட்டியில் ஊற்றிய பொய்கள் என்று ஆரம்பித்து,கண்ணுக்கழகாய் தெரிவதெல்லாம்கச்சை கட்டிய பொய்கள்.. என்று போய்சமாதான ஒப்பந்தமெல்லாம்சர்வதேச பொய்கள் என்று வைரமுத்து வார்த்தை விளையாட்டு விளையாடித் தீர்த்துவிட்டாராம்.பாடலை மீண்டும் மீண்டும் படித்து ரசித்த கே.பி இதற்கு அழகான டியூன் போடச் சொல்லி வித்யாசாகரிடம் தர, அவரும்நெடுநேரம் கவிதையை ரசிப்பதிலேயே நேரம் செலவழித்தாராம்.பொய் கூட இத்தனை அழகா? இப்படிப் பொய் சொல்ல வைரமுத்துவால் மட்டுமே முடியும்.ட்ரூ லைஸ்!!

By Staff

கே.பாலசந்தரின் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் பொய் படத்துக்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு கவிதைபடு கிளாசிக்காக வந்துள்ளதாம்.


பாலசந்தரின் படங்கள் என்றால் வைரமுத்துவின் பேனா ஒரு மடக்கு தேனையும் பல மடக்கு புதிய சிந்தனைகைளையும் கலந்துஅடித்துவிட்டு எழுத உட்காரும். முதல் வரியோடு அடுத்த வரியை போட்டிபோட வைப்பார் கவியரசு.

ஒரு நாள் இவரிடம் பொய் படத்தின் கதையை விலாவாரியாகச் சொன்ன கே.பி, பொய்யை வைத்து ஒரு கவிதை படைக்கச்சொன்னாராம். பொய் குறித்த கவிதாய்வாக அது இருக்க வேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்தாராம்.

பொய்யில்லாமல் உலகம் இல்லை, சில பொய்கள் மிகுந்த மதிப்பு மிக்கவை. சில நேரங்களில் நல்ல பொய்கள்தேவைப்படுகின்றன. ஏன், புகழ்ச்சி கூட பொய் தானே. அழகான பொய்களை பட்டியலிட்டு கவிதையாய் தருகிறேன் என்றுபாலசந்தரிடம் கூறிவிட்டு, என்று கிளம்பிப் பேனாராம்.

மறுநாள் கவிதையோடு வந்த கவிஞரிடம் ஆர்வமாய் பேப்பரை வாங்கிப் படித்த கே.பி அவரை கட்டிப் பிடித்துபாராட்டியிருக்கிறார்.

நாளை முதல் குடிப்பதில்லை..

புட்டியில் ஊற்றிய பொய்கள் என்று ஆரம்பித்து,

கண்ணுக்கழகாய் தெரிவதெல்லாம்

கச்சை கட்டிய பொய்கள்.. என்று போய்

சமாதான ஒப்பந்தமெல்லாம்

சர்வதேச பொய்கள் என்று வைரமுத்து வார்த்தை விளையாட்டு விளையாடித் தீர்த்துவிட்டாராம்.

பாடலை மீண்டும் மீண்டும் படித்து ரசித்த கே.பி இதற்கு அழகான டியூன் போடச் சொல்லி வித்யாசாகரிடம் தர, அவரும்நெடுநேரம் கவிதையை ரசிப்பதிலேயே நேரம் செலவழித்தாராம்.

பொய் கூட இத்தனை அழகா? இப்படிப் பொய் சொல்ல வைரமுத்துவால் மட்டுமே முடியும்.

ட்ரூ லைஸ்!!

Read more about: vairamuthus lyric on lies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X