ஐரோப்பிய நாடுகளில் எல் ஆர் ஈஸ்வரிக்கு கவுரவம்!

அக்டோபர் 14-ம் தேதி ஜெர்மனியிலும், 15-ம் தேதி பாரிஸிலும், 16-ம் தேதி சுவிட்சர்லாந்திலும், 21-ம் தேதி டென்மார்க் மற்றும் 22,23 தேதிகளில் நார்வேயில் நடக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளில் அவர் பாராட்டப்படுகிறார்.
வணக்கம் ஐரோப்பா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளை சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர் நடத்துகிறார்கள்.
இந்த விழாக்களில் எல் ஆர் ஈஸ்வரியும் தான் பாடிய மிகப் பிரபலமான பாடல்களை பாடவிருக்கிறார். அவருடன் பாடகர்கள் நவீன், ரெனைனா, பரணி, கவிதா மற்றும் யாழினி பங்கேற்றுப் பாடுகிறார்கள்.
ஹரிஹரன், சங்கர் மகாதேவன்
முன்னதாக சாதகப் பறவைகள் குழு லண்டனில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடத்தியது. பர்மிங்காமில் உள்ள என்ஐ அரேனா என்ற அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக ரூ 3 கோடிக்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர். வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முழுக்க தமிழ்ப் பாடல்களும், சனிக்கிழமை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்களும் பாடப்பட்டன.
தமிழ் திரையுலக இசை மேதைகள் கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா, சாதனையாளர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல்ஹாஸனின் பெருமைகளை எடுத்துக் கூறும் பாடல்களை இந்த கச்சேரியில் பாடி கைத்தட்டல் பெற்றனர்.


Click it and Unblock the Notifications











