Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வசந்தபாலனின் அங்காடி தெரு
டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்திற்கு பின்னர் வசந்தபாலன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
அங்காடி தெரு என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தை அவரே இயக்கப் போகிறாராம். படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் உட்பட அனைத்து நடிகர்களும் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்களாம்.
இதற்காக வசந்தபாலன் மற்றும் அவருடைய யூனிட்டை சேர்ந்த உதவி இயக்குனர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனராம்.
வடநாட்டு நடிகைகள் பின்னால் கோலிவுட் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நடிக்க தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்று வசந்த பாலனிடம் கேட்டதற்கு,
விருதுநகர் மக்களை மையமாக வைத்து வெயில் படத்தை இயக்கினேன். அந்தப்படம் பெரிய வெற்றியை பெற்று பல விருதுகளும் கிடைத்தது. அதே போல் நெல்லை மக்களின் காதலை மையமாக வைத்து அங்காடி தெரு என்ற புதிய படத்தை இயக்குகிறேன்.
நிச்சயம் இந்தப் படத்திற்கும் சென்னையிலோ அல்லது பிற இடங்களிலோ அழகான நடிகர்-நடிகையர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் படத்தின் கதைக்கேற்ப அந்த ஊரைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் படத்தின் கதை நேர்த்தியாக அமையும் என்பதற்காகத்தான் இங்கு வந்து தேர்வு செய்கிறேன் என்றார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் ஏராளமானோர் வசந்தபாலனை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனராம்.