Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
வசந்தபாலனின் அங்காடி தெரு
டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்திற்கு பின்னர் வசந்தபாலன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
அங்காடி தெரு என்ற பெயரில் தயாரிக்கப்படும் படத்தை அவரே இயக்கப் போகிறாராம். படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் உட்பட அனைத்து நடிகர்களும் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்களாம்.
இதற்காக வசந்தபாலன் மற்றும் அவருடைய யூனிட்டை சேர்ந்த உதவி இயக்குனர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனராம்.
வடநாட்டு நடிகைகள் பின்னால் கோலிவுட் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நடிக்க தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்று வசந்த பாலனிடம் கேட்டதற்கு,
விருதுநகர் மக்களை மையமாக வைத்து வெயில் படத்தை இயக்கினேன். அந்தப்படம் பெரிய வெற்றியை பெற்று பல விருதுகளும் கிடைத்தது. அதே போல் நெல்லை மக்களின் காதலை மையமாக வைத்து அங்காடி தெரு என்ற புதிய படத்தை இயக்குகிறேன்.
நிச்சயம் இந்தப் படத்திற்கும் சென்னையிலோ அல்லது பிற இடங்களிலோ அழகான நடிகர்-நடிகையர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் படத்தின் கதைக்கேற்ப அந்த ஊரைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் படத்தின் கதை நேர்த்தியாக அமையும் என்பதற்காகத்தான் இங்கு வந்து தேர்வு செய்கிறேன் என்றார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் ஏராளமானோர் வசந்தபாலனை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளனராம்.