Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஜ்குமார்-நாகேஸ்வரராவ் வீரப்பன்- அர்ஜூன்
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் கன்னடத்தில் திரைப்படமாகிறது. இதில் ராஜ்குமார் வேடத்தில், பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவும்,அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் வேடத்தில் அர்ஜூனும் நடிக்கவுள்ளனர்.
முத்துலட்சுமியும் இப்படத்தில் வீரப்பனின் மனைவியாகவே நடிக்கிறார்.சந்தனக் கடத்தல் வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் கர்நாடக மக்களை பெரிதாக உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அவர்களால் கற்பனை செய்து கூடபார்க்க முடியாத சம்பவம் அது. கன்னட மக்களின் ஒரு தரப்பினரால், அண்ணாவரு, தெய்வம் என்று அழைக்கப்பட்டு வந்த ராஜ்குமார் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குமேல் காட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தார்.கர்நாடகத்தையும், கன்னட மக்களையும் உலுக்கி விட்ட இந்த சம்பவம் இப்போது திரைப்படமாகிறது. ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெங்களூரில்போலீஸாரால் முற்றுகையிடப்பட்டு, தற்கொல செய்து கொண்டு இறந்த சுபா, சிவராஜன் ஆகியோரது கதையை சயனைடு என்ற பெயரில் படமாக்கிய ரமேஷ்தான்,ராஜ்குமார் கடத்தலையும் படமாக்கவுள்ளார்.
இவர் வீரப்பனின் வாழ்க்கையையும் படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதை எதிர்த்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.இருப்பினும் தற்போது முத்துலட்சுமி சமரசத்திற்கு முன்வந்துள்ளதால், வழக்கை விரைவில் வாபஸ் பெற முத்துலட்சுமி முடிவு செய்துள்ளார்.
இந் நிலையில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை இயக்கவுள்ளார் ரமேஷ். இதில் ராஜ்குமார் வேடத்தில், ஆந்திராவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ்நடிக்கிறார். வீரப்பனிடமிருந்து தப்பி ஓடி வந்த நாகப்பா வேடத்தில் அவரே நடிக்கிறார்.
அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் வேடத்தில் அர்ஜூன் சர்ஜா (நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூனேதான். இவரும் கன்னடர் தான்) நடிக்கிறார். முத்துலட்சுமியும்இப்படத்தில் வீரப்பனின் மனைவியாகவே நடிக்கிறார்.
வீரப்பன் வேடத்தில் நடிக்கப் போவது யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளார் ரமேஷ். விரைவில் படம் தொடர்பான முழு விவரங்களையும் அவர்வெளியிடவுள்ளார்.
இப்படம் தமிழிலும் வெளியிடப்படும். படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு முத்துலட்சுமியிடம் போட்டுக் காட்ட முடிவு செய்துள்ளார் ரமேஷ்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!