விஜய்யும் வடுமாங்காயும் விஜய் நடித்த திருப்பாச்சி தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது.வழக்கமாக தெலுங்குப் படங்களின் ரீ-மேக்கில் தான் விஜய் நடிப்பார். ஒரே ரத்த வாடையாக இருந்தாலும்,படத்தில் விஷயமே இல்லாவிட்டாலும் கூட 3 டான்ஸ், 4 பைட், 5 பஞ்ச் டயலாக் என்று படம் ஓடி வந்தது.ஆனால், ஆதி பயங்கரமாக சறுக்கிவிட்டது. இதனால் ரீ-மேக் விஷயத்திலும் தனது படத்தின் கதை விஷயத்திலும்மிக ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்துள்ளார் விஜய்.இந் நிலையில் தமிழில் ஓட்டமாய் ஓடிய திருப்பாச்சி தெலுங்குக்குப் போகிறது. விஜய் கேரக்டரில் சிரஞ்சீவியின்தம்பி பவன் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஆட மட்டுமே வரும். முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் வராது.ஆனாலும் இவரும் அங்கு முன்னணி ஹீரோ.அவருக்கு ஜோடியாக ஆசின் நடிக்கிறார். தமிழில் த்ரிஷா செய்த கேரக்டர் அது.அதில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார் மன்மத ராணிசாயா சிங். தெலுங்கிலும் அதே மெட்டில் பாடலை படத்தில் சொருகப் போகிறார்களாம்.அதற்கு ஆடப் போவது சாயாவே தானாம்.இந் நிலையில் விஜய் இப்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார். இயக்குனர் பேரரசுவின்கதை-திரைக் கதையை அவரது தம்பி முத்துவடுகு இயக்கப் போகிறாராம். படத்துக்கு முரசு என்று பெயர்சூட்டியுள்ளார்களாம்.இந்தப் படத்தில் ஹீரோயின் சான்ஸைப் பிடிக்க த்ரிஷா, ஆசின் இடையே கடும் போட்டி நடக்கிறதாம்.ஆனால் கில்லியில் தன்னோடு ஜோடி போட்ட ஒல்லி த்ரிஷாவுடன் சமீபத்தில் தான் நடித்த ஆதி புட்டுக்கொண்டதால், முரசு படத்துக்கு வடுமாங்காய் ஆசினையே விஜய் ரெக்கமண்ட் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.அதே நேரத்தில் இந்த வாய்ப்பைப் பிடிக்க முடியுமா என்று நயனதாரா தரப்பில் இருந்தும் முயற்சி நடக்கிறதாம்.வாய்ப்புகளைத் தேடுவதில்தான் அசின், த்ரிஷா, நயனதாராவுக்கும் இடையே கடும்போட்டி நடப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.இந்த முறை ஜெயிக்கப் போவது யாரு?
விஜய் நடித்த திருப்பாச்சி தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது.
வழக்கமாக தெலுங்குப் படங்களின் ரீ-மேக்கில் தான் விஜய் நடிப்பார். ஒரே ரத்த வாடையாக இருந்தாலும்,படத்தில் விஷயமே இல்லாவிட்டாலும் கூட 3 டான்ஸ், 4 பைட், 5 பஞ்ச் டயலாக் என்று படம் ஓடி வந்தது.
ஆனால், ஆதி பயங்கரமாக சறுக்கிவிட்டது. இதனால் ரீ-மேக் விஷயத்திலும் தனது படத்தின் கதை விஷயத்திலும்மிக ஜாக்கிரதையாக இருக்க முடிவு செய்துள்ளார் விஜய்.
இந் நிலையில் தமிழில் ஓட்டமாய் ஓடிய திருப்பாச்சி தெலுங்குக்குப் போகிறது. விஜய் கேரக்டரில் சிரஞ்சீவியின்தம்பி பவன் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஆட மட்டுமே வரும். முகத்தில் எந்த எக்ஸ்பிரசனும் வராது.ஆனாலும் இவரும் அங்கு முன்னணி ஹீரோ.
அவருக்கு ஜோடியாக ஆசின் நடிக்கிறார். தமிழில் த்ரிஷா செய்த கேரக்டர் அது.
அதில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார் மன்மத ராணிசாயா சிங். தெலுங்கிலும் அதே மெட்டில் பாடலை படத்தில் சொருகப் போகிறார்களாம்.
அதற்கு ஆடப் போவது சாயாவே தானாம்.
இந் நிலையில் விஜய் இப்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார். இயக்குனர் பேரரசுவின்கதை-திரைக் கதையை அவரது தம்பி முத்துவடுகு இயக்கப் போகிறாராம். படத்துக்கு முரசு என்று பெயர்சூட்டியுள்ளார்களாம்.
இந்தப் படத்தில் ஹீரோயின் சான்ஸைப் பிடிக்க த்ரிஷா, ஆசின் இடையே கடும் போட்டி நடக்கிறதாம்.
ஆனால் கில்லியில் தன்னோடு ஜோடி போட்ட ஒல்லி த்ரிஷாவுடன் சமீபத்தில் தான் நடித்த ஆதி புட்டுக்கொண்டதால், முரசு படத்துக்கு வடுமாங்காய் ஆசினையே விஜய் ரெக்கமண்ட் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த வாய்ப்பைப் பிடிக்க முடியுமா என்று நயனதாரா தரப்பில் இருந்தும் முயற்சி நடக்கிறதாம்.
வாய்ப்புகளைத் தேடுவதில்தான் அசின், த்ரிஷா, நயனதாராவுக்கும் இடையே கடும்போட்டி நடப்பது தான் உங்களுக்குத் தெரியுமே.
இந்த முறை ஜெயிக்கப் போவது யாரு?


Click it and Unblock the Notifications