Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் கன்னத்தைக் கிள்ளணும் போல இருக்கு...சத்யராஜ்
போக்கிரி வெற்றிவிழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் விஜயை இந்தியன் ப்ரூஸ்லி என்று புகழ்ந்தார். தற்போது எம்.ஜி.ஆர். போன்று விஜய் க்யூட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நண்பன் படத்தில் கல்லூரி முதல்வராக நடித்துள்ளார் சத்யராஜ். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் நண்பன் ஸ்பெஷல் ஷோ நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சங்கர், விஜய், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சத்யராஜ் கூறியதாவது,
ஒரு விஷயத்தை நானும் கன்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியல. இங்கே அதை சொல்லியே ஆக வேண்டும். இந்தியாவின் தலைசிறந்த நடிகர் ஆமீர் கான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நண்பன் படத்தில் ஆமீர் கானின் நடிப்பை விட விஜய் நடிப்பை ரசித்தேன்.
என் மனதில் என்ன படுகிறதோ அதை சொல்லிவிடுவேன். விஜய்யை பார்க்கையில் அவரது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அது ஒரு ஹீரோவுக்கு மிகவும் முக்கியம். அது தான் என் தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. எம்.ஜி.ஆரிடம் இருந்த க்யூட்னஸ் விஜய்யிடம் இருக்கிறது. அதனால் தான் அதை சொல்கிறேன் என்றார்.
சத்யராஜ் புகழந்து தள்ளியைக் கேட்டு விஜய் கொஞ்சம் அசந்து தான் போனார்.