Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தயாரித்து இருக்கும் புதிய படம், வெளுத்துக் கட்டு. இந்த படத்தில் கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். சேனாபதிமகன் இயக்கியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகரன்.
இந்தப் படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது:
"வெளுத்துக்கட்டு படம் தணிக்கை குழுவினருக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அத்தனை பேரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டினார்கள்.
இவ்வளவு நல்ல படத்தில் ஒரே ஒரு காட்சியின் நீளத்தை மட்டும் குறைத்து விடலாமே என்று கருத்து தெரிவித்தார்கள். நானும் அதற்கு சம்மதித்ததால், அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது. இந்தக்கால இளைஞர்களுக்கு தேவையான படம் வெளுத்துக்கட்டு என்று கூறி, படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய யு சர்டிபிகேட் வழங்கினார்கள்.
இப்போதெல்லாம் வினியோகஸ்தர்கள், பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே அதிக தொகை கொடுத்து வாங்குகிறார்கள். புது நடிகர்கள் நடித்த படங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை.
இந்த சூழ்நிலையில், புதுமுகங்கள் நடித்த வெளுத்துக்கட்டு படத்தை திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அன்பு, திருச்சி பிரான்சிஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் போன்ற பெரிய வினியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
'விஜய்யே பாராட்டிட்டார்!'
படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.
இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்...'' என்றார்.