Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்
விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.
இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர்.
இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.
விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.