Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம்-இளைய மகன் ஹீரோவாகிறார்
விஜயகாந்த், பிரேமலதா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் பிரபாகரன், இளையர் சண்முகப் பாண்டியன். இதில் மூத்த மகன் எஸ்ஆர்எம் கல்லூரியில், பிஇ படித்து வருகிறார். இளைய மகன் சண்முகப் பாண்டியன், பிளஸ்டூ முடித்துள்ளார். அடுத்து பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கப் போகிறார்.
இந்த நிலையில் தந்தை வழியில் தானும் நடிகராக வேண்டும் என்றஆசையை பெற்றோரிடம் கூறினாராம் சண்முகப் பாண்டியன். இதை விஜயகாந்த்தும், பிரேமலதாவும் வரவேற்று, ஆதரித்துள்ளனர்.
இதையடுத்து மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். மகனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் வகையிலான கதையைத் தேர்வு செய்யும் வேலையில் பிரேமலதா மும்முரமாக இறங்கியுள்ளாராம். அக்காவுக்கு உதவியாக தம்பி சுதீஷும் கதை கேட்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஹீரோவாவதற்கு முன்பு அடிப்படைத் தேவைகளான டான்ஸ், பைட் ஆகியவற்றையும் சண்முகப் பாண்டியன் கற்க ஆரம்பித்திருக்கிறாராம்.
விரைவில் சண்முகப் பாண்டியன் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்று விஜயகாந்த் வட்டாரம் தெரிவிக்கிறது.