twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜயலட்சுமியும் பசங்களும்.. இசையமைப்பாளர்-இயக்குனர்-தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபுவுக்கு ஹீரோ வேடம் கை கொடுக்காததால் டைரக்டராக அவதாரம் எடுக்கிறார்.தன் மகன் வெங்கட்டை வெளிநாட்டில் படிக்க வைத்தார் கங்கை அமரன். ஆனால், அவருக்கு படிப்பு ஏறவில்லை.திரும்பி வந்தவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட தன் மகனை வைத்து பூஞ்சோலை என்ற படத்தை இயக்கினார்கங்கை.ஆனால், படம் முடியவே இல்லை. இந் நிலையில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் இரண்டு ஹீரோக்களில்ஒருவராக நடித்தார் வெங்கட். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் ஆண்டி-ஹீரோவார நடித்த அந்தப்படம் ஹீரோயினாக நடித்த மீரா வாசுதேவனுக்கு நல்ல பிரேக் தந்தது.ஆனால், சரணுக்கும் வெங்கட்டுக்கும் அந்தப் படம் கை கொடுக்கவில்லை. இந் நிலையில் இப்போது இயக்குனராக முடிவு செய்துவிட்டார் வெங்கட். இவர் இயக்கப் போகும் படத்தின்பெயர் எங்க ஏரியா உள்ள வராத..இந்தப் படத்தை தயாரிக்கப் போவது யார் தெரியுமோ? எஸ்பிபியின் மகனான சரணே தான். ஏற்கனவே மழைஉள்பட சில படத்தை தயாரித்து கையை சுட்டுக் கொண்டாலும் சரணுக்கு தயாரிப்பு ஆர்வம் போகவேஇல்லையாம்.இதனால் தனது நண்பர் சிங்கப்பூர் சரவணா என்பவருடன் சேர்ந்து வெங்கட்டை டைரக்டராக்கி படத்தைதயாரிக்கிறர்.இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கவனிக்கப் போவது வெங்கட் பிரபுவே தான்.இதில் கங்கை அமரனின் மகன்களான பிரேம்ஜி, சிவா ஆகியோரும், இசையமைப்பாளர் தேவானின் தம்பி மகன்ஜெய் ஆகியோரும் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள்.மேலும் இன்னொரு ஹீரோவும் உண்டு. அவர் வசந்த் அண்ட் கோ நிறுவன அதிபர் வசந்த குமாரின் மகன் விஜய்.இவ்வாறு பெரிய வூட்டுப் புள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக அல்லது ஜாலிக்காக இந்தப் படத்தைஎடுக்கிறார்கள். அப்பாக்கள் சேர்த்து வைத்த சொத்துக்களும் பணமும் இருப்பதால் எந்த பதற்றமும் இல்லாம்களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் ஹீரோயின் தொடர்பானது. இதில் நாயகியாக நடிக்கப் போவதுகாதல் கோட்டை புகழ் இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியாம்.கலங்குங்க புள்ளைகளா... கலங்குங்க..

    By Staff
    |
    இசையமைப்பாளர்-இயக்குனர்-தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபுவுக்கு ஹீரோ வேடம் கை கொடுக்காததால் டைரக்டராக அவதாரம் எடுக்கிறார்.

    தன் மகன் வெங்கட்டை வெளிநாட்டில் படிக்க வைத்தார் கங்கை அமரன். ஆனால், அவருக்கு படிப்பு ஏறவில்லை.திரும்பி வந்தவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட தன் மகனை வைத்து பூஞ்சோலை என்ற படத்தை இயக்கினார்கங்கை.

    ஆனால், படம் முடியவே இல்லை. இந் நிலையில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் இரண்டு ஹீரோக்களில்ஒருவராக நடித்தார் வெங்கட். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் ஆண்டி-ஹீரோவார நடித்த அந்தப்படம் ஹீரோயினாக நடித்த மீரா வாசுதேவனுக்கு நல்ல பிரேக் தந்தது.

    ஆனால், சரணுக்கும் வெங்கட்டுக்கும் அந்தப் படம் கை கொடுக்கவில்லை.

    இந் நிலையில் இப்போது இயக்குனராக முடிவு செய்துவிட்டார் வெங்கட். இவர் இயக்கப் போகும் படத்தின்பெயர் எங்க ஏரியா உள்ள வராத..

    இந்தப் படத்தை தயாரிக்கப் போவது யார் தெரியுமோ? எஸ்பிபியின் மகனான சரணே தான். ஏற்கனவே மழைஉள்பட சில படத்தை தயாரித்து கையை சுட்டுக் கொண்டாலும் சரணுக்கு தயாரிப்பு ஆர்வம் போகவேஇல்லையாம்.

    இதனால் தனது நண்பர் சிங்கப்பூர் சரவணா என்பவருடன் சேர்ந்து வெங்கட்டை டைரக்டராக்கி படத்தைதயாரிக்கிறர்.

    இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கவனிக்கப் போவது வெங்கட் பிரபுவே தான்.

    இதில் கங்கை அமரனின் மகன்களான பிரேம்ஜி, சிவா ஆகியோரும், இசையமைப்பாளர் தேவானின் தம்பி மகன்ஜெய் ஆகியோரும் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள்.

    மேலும் இன்னொரு ஹீரோவும் உண்டு. அவர் வசந்த் அண்ட் கோ நிறுவன அதிபர் வசந்த குமாரின் மகன் விஜய்.

    இவ்வாறு பெரிய வூட்டுப் புள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக அல்லது ஜாலிக்காக இந்தப் படத்தைஎடுக்கிறார்கள். அப்பாக்கள் சேர்த்து வைத்த சொத்துக்களும் பணமும் இருப்பதால் எந்த பதற்றமும் இல்லாம்களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் ஹீரோயின் தொடர்பானது. இதில் நாயகியாக நடிக்கப் போவதுகாதல் கோட்டை புகழ் இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியாம்.

    கலங்குங்க புள்ளைகளா... கலங்குங்க..

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X