விமலா கொடுத்த கடுக்காய்! பொய் நாயகி விமலா ராமன் தன்னைத் தேடி வந்த ஒரு படத்தை வேண்டவேவேண்டாம் என்று சொல்லி எஸ்கேப் ஆகியுள்ளார்.ஆஸ்திரேலிய தமிழச்சியான விமலா ராமன் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் பொய்படத்தில் நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட தமிழைதமிழாகவே பேசி வரும் விமலா ராமனின் நடிப்பு கோலிவுட்டில் பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது.பொய் வெளியாவதற்குள்ளேயே நிறைய தயாரிப்பாளர்கள் விமலாவை அணுகஆரம்பித்துள்ளனர். அவரும் கதை கேட்டபடி உள்ளார், யாரிடம் இன்னும் அட்வான்ஸ்வாங்காமல் பொய் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அப்படிப்பட்ட விமலா, ஒரு பட வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது, என்ன, ஏதுஎன்று கூட கேட்காமல், வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டாராம். அந்தப் படம்திருமகன். அதன் நாயகன் எஸ்.ஜே.சூர்யா.! எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ள படங்களும், அவர் நடித்த படங்களும் ஏகப்பட்டசர்ச்சைக்குள்ளானது உலகறிந்த விஷயம். அத்தோடு, நாயகிகளை அவர் கையாளும்விதம் ஏமரகமானது.இதனால் அவர் நடிக்கவுள்ள திருமகன் படத்திற்கு ஹீரோயின்களே கிடைக்காமல்தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நயனதாராவை முதலில் கேட்டார்கள்.கள்வனின் காதலி படத்தின்போது சூர்யாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகஇந்தப்படத்தில் நடிக்க நயனதாரா மறுத்து விட்டார். இதையடுத்து விமலா ராமனைஅணுகினர்.சூர்யா ஹீரோ என்ற உடனேயே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் விமலா ராமன்.முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் எஸ்.ஜே.சூர்யாவின்நாயகியாகி தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதுதான்விமலாவின் எண்ணமாம்.இதனால்தான் திருமகனை வேண்டாம் என்று கூறி விட்டாராம். பொய் ரிலீஸான பின்னர் தனக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து அதிக தமிழ்ப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் விமலா.தான் நடிக்கும் படங்களுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்றும் தீர்மானமாகஉள்ளாராம் விமலா. பொய்யில் அவருக்கு அவரேதான் குரல் கொடுத்துள்ளாராம்.சூர்யா நிலை இப்படியா ஆக வேண்டும்?

By Staff
பொய் நாயகி விமலா ராமன் தன்னைத் தேடி வந்த ஒரு படத்தை வேண்டவேவேண்டாம் என்று சொல்லி எஸ்கேப் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலிய தமிழச்சியான விமலா ராமன் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் பொய்படத்தில் நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட தமிழைதமிழாகவே பேசி வரும் விமலா ராமனின் நடிப்பு கோலிவுட்டில் பெரும் பாராட்டைப்பெற்று வருகிறது.

பொய் வெளியாவதற்குள்ளேயே நிறைய தயாரிப்பாளர்கள் விமலாவை அணுகஆரம்பித்துள்ளனர். அவரும் கதை கேட்டபடி உள்ளார், யாரிடம் இன்னும் அட்வான்ஸ்வாங்காமல் பொய் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

அப்படிப்பட்ட விமலா, ஒரு பட வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது, என்ன, ஏதுஎன்று கூட கேட்காமல், வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டாராம். அந்தப் படம்திருமகன். அதன் நாயகன் எஸ்.ஜே.சூர்யா.!

எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ள படங்களும், அவர் நடித்த படங்களும் ஏகப்பட்டசர்ச்சைக்குள்ளானது உலகறிந்த விஷயம். அத்தோடு, நாயகிகளை அவர் கையாளும்விதம் ஏமரகமானது.

இதனால் அவர் நடிக்கவுள்ள திருமகன் படத்திற்கு ஹீரோயின்களே கிடைக்காமல்தடுமாறிக் கொண்டிருந்தார்கள். நயனதாராவை முதலில் கேட்டார்கள்.

கள்வனின் காதலி படத்தின்போது சூர்யாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகஇந்தப்படத்தில் நடிக்க நயனதாரா மறுத்து விட்டார். இதையடுத்து விமலா ராமனைஅணுகினர்.

சூர்யா ஹீரோ என்ற உடனேயே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் விமலா ராமன்.முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் எஸ்.ஜே.சூர்யாவின்நாயகியாகி தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதுதான்விமலாவின் எண்ணமாம்.

இதனால்தான் திருமகனை வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

பொய் ரிலீஸான பின்னர் தனக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து அதிக தமிழ்ப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் விமலா.

தான் நடிக்கும் படங்களுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்றும் தீர்மானமாகஉள்ளாராம் விமலா. பொய்யில் அவருக்கு அவரேதான் குரல் கொடுத்துள்ளாராம்.

சூர்யா நிலை இப்படியா ஆக வேண்டும்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X