Don't Miss!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சங்கமத்தின் சங்கடம்!
சங்கம நாயகி விந்தியாவுக்கு புது சிக்கல் வந்துள்ளதாம். தான் சார்ந்த பார்ட்டியைச் சேர்ந்த ஒரு பார்ட்டியால்வந்த சங்கடமாம் இது.
விந்தியா ஒரு கட்டத்தில் குத்து விளக்கு நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தார். சங்கமம் படத்தில்அம்சமாக நடித்ததால் வந்த அங்கீகாரம் இது.ஆனால் குத்துவிளக்காகவே இருந்தால் காலம் தள்ளுவது சிரமம் என எண்ணிய சங்கம், பெட்ரோமாக்ஸ்லைட்டாக மாறினார், கிளாமருக்குத் தாவினார். அப்படியும் கூட வாய்ப்புகள் வரவில்லை.
ஒரு கட்டத்தில் விந்தியாவுக்கு வாய்ப்பே இல்லாமல் போண்டியானது மார்க்கெட். இதனால் சிம்னி விளக்குரேஞ்சுக்கு இறங்கி குத்துப் பாட்டுக்கும் ஆட ஆரம்பித்தார். அப்படியும் தேறவில்லை.
இந்த சமயம் பார்த்து சட்டசபைத் தேர்தல் குறுக்கிடவே, அதிமுகவில் ஐக்கியமாகி தீவிரப் பிரசாரம் செய்துஅசத்தினார். ஆனால் அய்யோ பாவம், விந்தியா போய்ச் சேர்ந்த நேரமோ என்னவோ அதிமுக படுதோல்வியைசந்தித்து ஆட்சியையும் இழந்தது.என்னடா இது சோதனை என்று அரண்டு போன விந்தியா அரசியலில் தீவிரம் காட்டாமல் அமுக்கமாகி விட்டார்.இப்போது அம்மணி கையில் புதுப் படம் எதுவும் இல்லையாம்.
ஆளு, அதிமுக பார்ட்டி என்று முத்திரை குத்தப்பட்டு விட்டதால் யாரும் புக் பண்ண முன்வருவதில்லையாம்.இதனால் வீட்டிலேயே குத்த வைத்து விசும்பிக் கொண்டிருக்கும் விந்தியாவுக்கு அதிமுகவின் முக்கியப் புள்ளிஒருவர் உதவிக் கரம் நீட்டியுள்ளாராம்.அதாவது விந்தியாவை ஹீரோயினாக போட்டு படம் எடுக்க அந்தப் புள்ளி முன்வந்துள்ளாராம்.
இப்படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க அவர் தயாராக இருக்கிறாராம். இதனால் முதலில்விந்தியா சந்தோஷப்பட்டுள்ளார்.ஆனால் அடுத்து அந்தப் புள்ளி போட்ட கோலத்தைப் பார்த்து விந்தியா அரண்டு போய் விட்டாராம். அதாவதுபடம் முடியும் வரை நீங்கள் எனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த சகாயத்திற்குபிரதியுபகாரமாக புள்ளி போட்ட கோலமாம்.
இதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் அப்படியே திரும்பி விட்டாராம் விந்தியா. ஆஃபரை ஏற்பதா,வேண்டாமா என்ற குழப்பத்தில் இப்போது விந்தியா நகத்தை மென்று கொண்டிருக்கிறாராம்.