Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
''மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்!
சென்னை: சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி.எம்.எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.
இதுதாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன்தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டிஎம்எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டிஎம் செளந்தரராஜன்.
பிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி.எம்.செளந்தரராஜன். தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி.எம்.எஸ்,ஸின் கம்பீரக் குரல்.
பக்தியில் பரவசம்
பக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டிஎம்எஸ்ஸுக்கு நிகர் அவரேதான். அவரைத் தவிர வேறுயாராலும் இப்படி ஒரு வெரைட்டியை, வெர்சடாலிட்டியை யாருமே தந்ததில்லை.
உருக வைத்த முருகன்
முருகன் பாடல்களை இவரைப் போல யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி.எம்.எஸ்.ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்.. பக்திப் பரவசம்...
அழ வைத்தவர்.. உருக வைத்தவர்.. நெகிழ வைத்தவர்
பாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி.எம்.எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம். அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி.எம்.எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல். சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி.எம்.எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....
ஜவ்வாது மேடையிட்டு
ஜவ்வாது மேடையிட்டு.. சர்க்கரையில் பந்தலிட்டு... கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி.எம்.எஸ்.இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை.. இப்படி ஒரு பாடலைஇப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம். அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது.
அமைதியான நதியினிலே ஓடம்...
அப்படியே கண்ணை மூடிக் கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்.. என்ன ஒரு அழகான பாடல்.
காதலித்து வேதனையில் வாட வேண்டும்
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.. அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.. இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி.எம்.எஸ்.ஸின் குரலைப் பாராட்டுவதா... தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
கொடி அசைந்தததும்...
அழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்.. அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டிஎம்எஸ்ஸுக்கும், பி.சுசீலாவுக்கும்.. இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்...
எழுத எழுத அழுகை வருகிறது டி.எம்.எஸ்....தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.