Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தான் இயக்கிய நடிகர்களில் யார் சிறந்தவர்... பாலாவின் தக் லைஃப் பதில்
சென்னை: இயக்குநர் பாலா தற்சமயம் நடிகர் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
நந்தா, பிதாமகன் திரைப்படங்களை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கிறார். இதைத் தவிர்த்து அவன் இவன் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார்.
இந்நிலையில் பாலா முன்னதாக கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகியுள்ளது.
15 படம் ஃபிளாப்.. கனடாவுக்கே போயிடலாம்னு தோணுச்சு.. கடும் விரக்தியில் பேசிய அக்ஷய் குமார்!
பாலா எனும் சிற்பி
வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விக்ரம் எனும் நடிகனுக்கு சேது திரைப்படம் மூலம் வெற்றியை கொடுத்து பாதையை காட்டியவர் பாலா. சேது திரைப்படம் தேசிய விருது வென்றது மட்டுமல்லாமல் பாலாவிற்கு ஃபிலிம்ஃபேரில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வாங்கிக் கொடுத்தது. நடிகர் விக்ரமிற்கும் ஸ்பெஷல் ஃபிலிம் ஃபேர் விருது கொடுக்கப்பட்டு, தேசிய விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டார். அதேபோல நடிக்க வரவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் சூர்யாவை நந்தா திரைப்படம் மூலம் பட்டை தீட்டியவர் பாலா.
தேசிய விருதுகள்
அவரது படங்களுக்கு மட்டுமல்லாமல் அவரது இயக்கத்தில் நடித்தவர்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு நடிக்க வைப்பார். அதனாலேயே பல நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். நடிகை திரிஷா கூட பாலாவின் ரசிகை. அவர் இயக்கத்தில் நடிக்க பல முறை ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப் இவரது மிகப் பெரிய விசிறி. பாலாவின் படங்களை அங்கு ஒவ்வொரு முறை புரமோட்டும் செய்வார்.
நடிகர்களின் பட்டியல்
பாலா இயக்கத்தில் இதுவரை நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, ஜிவி பிரகாஷ், சசி குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் மற்றும் சூர்யா முன்னணி நடிகர்கள் ஆனதிற்கு இவர்தான் காரணம் என்பது ஊர் அறிந்த விசயம். விக்ரமின் மகன் துருவ் கூட பாலாவின் இயக்கத்தில் நடித்திருந்தாலும் அந்தப் படத்தை வெளி வரவிடாமல் மீண்டும் ரீஷூட் செய்து பாலாவின் பெயருக்கு களங்கம் விளைவித்தது வேறு கதை. அதனாலேயே இப்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படம் வெளிவர வேண்டியது முக்கியமாக கருதப்படுகிறது.
நடிகர்களின் பட்டியல்
பாலா இயக்கத்தில் இதுவரை நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, ஜிவி பிரகாஷ், சசி குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் மற்றும் சூர்யா முன்னணி நடிகர்கள் ஆனதிற்கு இவர்தான் காரணம் என்பது ஊர் அறிந்த விசயம். விக்ரமின் மகன் துருவ் கூட பாலாவின் இயக்கத்தில் நடித்திருந்தாலும் அந்தப் படத்தை வெளி வரவிடாமல் மீண்டும் ரீஷூட் செய்து பாலாவின் பெயருக்கு களங்கம் விளைவித்தது வேறு கதை. அதனாலேயே இப்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கும் படம் வெளிவர வேண்டியது முக்கியமாக கருதப்படுகிறது.
சிறந்த நடிகர்
இந்நிலையில் உங்கள் இயக்கத்தில் நடித்த நடிகர்களில் யார் சிறப்பாக நடித்த நடிகர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த விதமான யோசனை இல்லாமல் நான் தான் சிறந்த நடிகன். ஏன்னா உங்க எல்லாருக்கு முன்னாடியும் நல்லவன் மாதிரி நடிக்கிறேன்ல. அதனால நான் தான் பெரிய நடிகன் என்று தக் லைஃப் பதிலை கொடுத்துள்ளார் பாலா.