Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'விஸ்வரூபத்தில் கிராபிக்ஸ் பேசப்படும்'
கமல் ஹாசனின் தெனாலி, ஆளவந்தான், உன்னைப் போல் ஒருவன் ஆகிய படங்களில் பணியாற்றியவர் மதுசூதனன். அவர் தற்போது விஸ்வரூபம் படத்தின் மூலம் 4வது முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். விஸ்வரூபம் படத்தில் கிராபிக்ஸ் காட்சி மேற்பார்வையாளராக உள்ளார். அவர் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியவர்.
இந்நிலையில் அவர் விஸ்வரூபம் குறித்து கூறுகையில்,
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவுக்கு உருவாக்கியுள்ளோம். கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் கதையையோ, இயல்பையோ பாதிக்காத அளவில் அமைந்துள்ளன.
இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு பணிபுரிந்துள்ளோம். வேலை அதிகம் இருந்ததாலேயே படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
ஸ்பைடர்மேன் படத்தில் பணியாற்றியதால் என்னால் தசாவதாரம் படத்தில் பணியாற்ற முடியவில்லை. அந்த குறை விஸ்வரூபம் மூலம் தீர்ந்தது. இது நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்றார்.