Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
படத்துக்கு படம் எதுக்கு ரொமான்ஸ் பண்ணனும்... கார்த்தி மனைவியின் லாஜிக் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு நல்ல மரியாதை உண்டு.
ஒழுக்கத்திற்கு உதாரணம் என்பதைத் தாண்டி சமுதாயப் பிரச்சனைகளுக்கு அவர்கள் குடும்பத்திலிருந்து கட்டாயம் குரல் கொடுப்பார்கள்.
அந்த வகையில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் நடிகர் கார்த்தி, தான் காதல் காட்சிகளில் நடித்தால் மனைவியிடமிருந்து வரும் எதிர்வினையை பற்றி கூறுவார்.
BB-6..ஒரு டீ குடிக்க இத்தனை பிரச்சினையா அசீம்?..முதல் நாளே எடுத்தெரிஞ்சு பேசுவதால் டீம் மேட்ஸ் கோபம்
கார்த்தி குடும்பம்
ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, தனது மனைவி சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் கிடையாது. சென்னையில் படித்திருந்தாலும் அடிப்படையில் ஒரு கிராமத்துப் பெண். படங்களில் பணிபுரியும்போது நான் வேலை வேலை என்று ஒரே சிந்தனையில் இருப்பேன். குடும்பத்தையும் பணியையும் எப்படி சமநிலையில் சமாளிப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் எனது மனைவிதான். அது எளிமையான பாடம் கிடையாது. ஆனால் படிக்க வேண்டிய பாடம் என்று கார்த்தி நெகிழ்ச்சியாக கூறியிருப்பார்.
காதல் காட்சிகள்
நீங்கள் நடித்த காதல் காட்சிகளை பார்க்கும்போது உங்கள் மனைவி எப்போதாவது சற்று குறைவாக நடியுங்கள் என்று கூறியிருக்கிறாரா என்ற கேள்விக்கு எப்போதாவது அல்ல எப்போதுமே அப்படித்தான் கூறுவார். ஹீரோயின்களை தொடாமல் உங்களால் நடிக்க முடியாதா? அந்தக் காலத்தில் தொடாமல்தானே நடிப்பார்கள். ஏன் அது போல் உங்களால் நடிக்க முடியாதா என்று கேட்பாராம். அதற்கு அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு என்று பதிலளிப்பாராம்.
மனைவியின் லாஜிக்
கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த ஒரே ஒரு காதல் திரைப்படம் அவரது திருமணத்திற்கு முன்பு நடித்ததாம். திருமணத்திற்கு பின் காதல் படங்கள் நடிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். காதல் காட்சிகள் தனக்கு எப்போதுமே பிரச்சனைதான். அதற்கு ஏற்றார் போல கதாநாயகி, பாடல்கள் என்று எதுவுமே இல்லாத கைதி போன்ற திரைப்படங்கள் எனக்கு வெற்றி பெறுவதால், பார்த்தீர்களா... இந்த மாதிரி கதைதான் உங்களுக்கு ஏற்றார்போல் இருக்கிறது. அதனால் இது மாதிரியான கதைகளையே தேர்வு செய்து நடியுங்கள் என்று கூறுவாராம்.
கார்த்தியின் பதில்
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய கணவன் இன்னொரு பெண்ணுடன் நடிக்கும்பொழுது கண்டிப்பாக மனைவி அப்படித்தான் பொசெசிவாக இருப்பார்கள். ஆண்களாக நம்மால் அது போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதிதான். இருப்பினும் படங்களில் காதல் காட்சிகளை தவிர்க்க முடியாது. எனவே அந்தக் காட்சிகள் வரும் பொழுது கண்ணை மூடிக்கொள் என்று மனைவியிடம் சமாளிப்பேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!