Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதுப்படங்களுக்கு 20 பேர் கூட வரவில்லை... அதிர்ச்சியில் திரையுலகம்!
இந்த கிரிக்கெட் திருவிழா தொடங்கி 4 நாட்களே ஆன நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன.
ஓரளவு ஹிட் படம் என்று கூறப்படும் பயணம், யுத்தம் செய் போன்றவற்றுக்குக் கூட பகல் காட்சிக்கு 50 பேர் வருவதே அதிசயமாகிவிட்டது, புறநகர்ப் பகுதிகளில். பொதுவாக மாலை நேரக் காட்சிகளுக்கு ஓரளவு கூட்டம் வரும். ஆனால் உலகக் கோப்பை ஆட்டங்கள் துவங்கிய பிறகு சுத்தமாகக் குறைந்துவிட்டது.
வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் பயணம் படத்தின் இரவுக் காட்சிக்கு 20 பேர் கூட வரவில்லை. பெரும்பாலான போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடப்பது திரையரங்கு உரிமையாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் சில திரையரங்குகளில் காட்சி நேரம் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. மீதி நேரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.
இன்னும் சில அரங்குகள் காட்சி நேரத்தை மட்டும் குறைத்துவிட்டன, கரண்ட் பில்லாவது மிச்சமாகட்டும் என்ற நினைப்பில்.
இந்த நிலையை எதிர்ப்பார்த்தே, 7 முக்கியப் படங்களின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 8-க்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைகின்றன. பாலாவின் அவன் இவன் கூட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்படுகிறது.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!