Don't Miss!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அஜீத்-ஷாலினிக்கு பெண் குழந்தை
2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை பிறந்ததும் ஷாலினி 401வது அறைக்கு மாற்றப்பட்டார். இது மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் அறையாகும். அதிலும் திரைப்படத் துறையினருக்கு மிக மிக அரிதாகத்தான் ஒதுக்குவார்களாம்.
ஷாலினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அஜீத் கூடவே இருந்தார். குழந்தை பிறந்ததும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
அஜீத்-ஷாலினிக்கு குழந்தை பிறந்த செய்தியை அறிந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நபராக அஜீத்தைத் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.
குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இருந்த அஜீத் அதுகுறித்து நம்மிடம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதை வெளிப்படுத்த எனக்கு இப்போது வார்த்தைகளே இல்லை. இந்த புத்தாண்டை சந்தோஷத்துடன் ஆரம்பிக்க அருள் புரிந்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
அஜீத்-ஷாலினியை நாமும் வாழ்த்துவோம்!